Sunday, June 9, 2013

பொறுத்து போதும் புறப்படு



சங்கு முரசொலி எங்கும் பரவிட
சொந்தமண் ஆண்ட இனம் - இன்று
சிங்கமழைத்திடச் சென்ற முயலென 
கொண்ட உயிர் தரவா
எங்கள் சிறுவரை இன்பமழலையை
இம்சை வதைபுரிந்தே - பகை
செங்குருதி யெழச்செய்பவர்கண்டுமே
சோர்ந்து கிடந்திடவோ

எங்கும் பரந்ததாம் இன்பத் தமிழெனில்
இன்னும் இழிமைசெய்து அவர்
எங்கள் தமிழினம் இல்லையென்றாக்கிட
ஏழையென் றாவதுவோ
சங்கதமிழ் சொல்லும் மங்கையர்வீரமும்
சற்றும் இளைத்தல்ல என்று
செந்தமிழர் இனம்சேரும் உரிமையை
சேர்ந்தொன்றாய் கேட்டிடவா

பொங்கி யெழு இன்னும் என்னதடையிது
பென்னம் பெரிதுயிரோ - கடல்
வங்கமெழும் புயல் என்றுமனம்கொண்டு
வீழ்த்த எழுகுவையோ
மங்கை இளையவர் மட்டுமல்ல முது
மாந்தர் மழலைகளும் இனி
செங்கனல் கண்ணொளி சீறத் துடித்துடன்
சேர்ந்து எழுந்திடுவீர்

தங்கம் கிடைத்திடத் தாயெனும் மண்ணையும்
தாஎன விட்டிடவா -நாமும்
அங்கம் குறைந்த அறிவிலியோ எங்கள்
அன்னையை விற்றிடவோ
எங்களினம் குடிகொண்ட நிலமதில்
ஏவல் பிசாசுகளும் -வயல்
தங்களுடையதென் றோடிவிதைத்திட
தந்து மகிழுவதுவோ

நங்கையர் எந்தமிழ் நாட்டவரை படை
நானிலம் பார்த்திருக்க - அவர்
தங்களின் பேய்மன தாகமும்தீர்த்திட
தந்து கிடப்பதுவோ
செங்குருதி காணச் சேர்த்தவர் கண்டுமே
சோர்ந்த்து படுத்திடவோ - இன்னும்
பங்கம் இழைத்திடப் போகட்டும் என்றுடல்
போர்த்துப் படுத்திடவோ

சொந்தஅரசும் சுதந்திரமும் இவர் சொல்லும்
இறைமையதும் - நம்
முந்தையர் கொண்டு அரசுசெய்த நில
மேன்மைகள் சொல்லிடடா
மந்தைகளாய் மதி கெட்டிடவோ எங்கள்
மண்ணை இழந்த பின்பு - மன
சிந்தனையில் தரம் கெட்டுகிடப்பதோ
சீறி எழுந்திடடா

எந்த சலனமுமின்றி அழிவினை
ஏற்று வணங்கிடவோ - அல்ல
சொந்த உயிர்துடித் தெங்கள் தமிழ் அன்னை
சீருறச் செய்குவையோ
நொந்துகிடந்ததுபோதும் புரண்டெழு
நில்லு புரட்சிஎனும் - ஒரு
மந்திரமன்றி மருந்தில்லை முற்றிய
மாபெரும் நோயிதற்கு

கிரிகாசன்

எழுந்துவா ஈழம் மீட்க!



நேரமில்லை என்று சொல்ல நேரமில்லை அன்புதோழ
நீயெழுந்து எல்லைபோட வேண்டும்
ஈரமில்லை என்று நெஞ்சில் காணுகின்றதோ விடுத்து
தூரமில்லைநீ நடக்கவேண்டும்
வீரமில்லை என்றுசோர நேரமில்லை அன்புநண்ப
பாரமில்லை தோள் சுமக்க வேண்டும்
யாருமில்லை ஈழம்காக்க நின்னையன்றி! பார்த்திருக்க
நேரமில்லை வாழ்வெடுக்கவேண்டும்

போருமில்லை தீயுமில்லை பூகம்பக்கள் ஏதுமில்லை
பீதிகொள்ள ஒன்றுமில்லை யென்று
யாருமில்லை என்றிருக்க நானுமில்லை என்னறெமக்குள்
வாரிமுள்ளை வீசிசெல்ல வேண்டாம்
வேருமில்லை என்று வெட்டும் கோடரிக்கு கைபிடிக்க
கூடிநிற்பதென்று எண்ணிடாதே
தீருமென்று நீயெழுந்து தேசமண்ணைக் காதலித்துத்
தேவை கொள்ளு தூங்க நேரமில்லை

நேரமில்லை என்று சொல்லி நேரமுள்ளை நீநிறுத்த
நேரம்நிற்பதில்லை அங்குஓடும்
தீரமில்லைச் சாரமில்லை செல்வதற்குப் பாதையில்லை
சேரவில்லை என்று சாட்டுவிட்டு
தூரமுள்ள வானவில்லைப் போலவண்ணம் காட்டி யுந்தன்
சோருமுள்ளம் நீவிடுத்தல் வேண்டும்
ஓரமில்லை நீயும் அஞ்சி ஓடுமெல்லை வாழ்வு விட்டு
ஓர்மையோடு ஈழம் மீட்க வேண்டும்

கிரிகாசன்

Saturday, June 8, 2013

வீரம் தாரும் மைந்தர்காள்!



நீங்கள் நின்றபோது எங்கள் நிலமிருந்தது - அந்த
நிலமிழந்தபோது உங்கள் நினைவு மீந்தது
தாயிருந்தபோதும் பிள்ளை தனியிருக்குது - இன்று 
தவித்திருக்கும் மக்கள் நெஞ்சு உமைநினைக்குது
பாயிருந்தபோது தூக்கம் வரமறுக்குது - இங்கு
பாய்ந்துவந்துபேய்கள் எமது தலையறுக்குது
நீங்கள் வந்து எங்கள் உள்ளே சேர்ந்திருப்பது -
இனி எந்தநாளிலன்றுதானே பயம் விடுப்பது

மயிரிழக்க மானம் என்று உயிரிழப்பது - கவரி
மானின் எண்ணம் அதனையொத்த தமிழிருந்தது
பெயரிழந்து பேச்சிழந்து பெருமை உடைமைகள் - இன்னும்
பேணிக் காத்த கலைவளங்கள் இவையிழந்துமே
துயரெழுந்து அழுதபோதும் அலறிஓடியும் - பெண்ணின்
துகிலிழந்து உயிரிழந்து துடிதுடிக்கவும்
எவரெழுந்தும் கேட்கவில்லைப் புவனம் மீதினில் - இனி
எது இழக்க உண்டு நீங்கள் எழுந்துவாருங்கள்

கையிழந்து கையில்கொண்ட கனமிழந்ததும் - எம்மைக்
காக்க ஏதுமில்லை யென்று காலம்சொன்னதும்
மெய்யிழந்த புத்தன் நாட்டை பையக் கொள்கிறான் - இந்த
மேதினியில் பலர் இணைந்து பாவம் செய்கிறார்
நெய்யிழந்த தீபமாக நாம் அணைவதா? இல்லை
வெய்யிலாக வான்வீதி உதயமாவதா?
பொய்யிழந்த நேர்மை இன்று வாழமுடியுமா இன்று
பேய்கள்கூடிக் கூத்தடிக்கும் பூமியல்லவா

இடியெழுந்து மேகமின்றி மின்னிக் கொண்டது - அன்று
எதிரிவானில் உங்கள்வீரம் புகையைவைத்தது
துடித்தெழுந்து நடை நடந்தீர் கிடுகிடுத்தது எதிரி
துரத்திஓட செய்தீர் ஈழம் பளபளத்தது
எலிபிடித்துவைக்க பூமி வலையறுத்தது - உலகம்
எழுந்து எங்கள் நெஞ்சின் நேரே இலக்கு வைத்ததும்
கடிகடித்து காட்டு நாய்கள் வேட்டையாடவே - இன்று
கையை விட்டுக் காத்திருந்து காட்சிகாணுது

ஐயோ நானா என்ரு ஐநா பின்னிழுக்குது - அது
அத்தனையும் வைத்திருந்து என்னசெய்யுது?
குய்யோ தானோ என்று கத்திக் குமுறினாலுமே - அது
குடைசரித்து கடமைதன்னை குப்பையாகுது
எய்யும் அம்பு எடுத்த கையை இன்னொருநாடு - மெல்ல
இல்லையென்று பின்னிழுத்து மூடிவைத்தது
பெய்யும் மழை, இடியிடிக்கும் புயலடிக்குமே - நீங்கள்
உங்கள்வீரம் எமக்களித்தால் உயிர் பிழைக்குமே!

செயல்வளர்த்து சீற்றம்கொண்டு சீறும் வேங்கையாய் - நீவிர்
சென்ற பாதை நாம்தொடர்ந்து செல்லும்போதிலும்
புயல் எழுந்தபோது பேய்கள் சிங்களம் யாவும் - பேச
பயமெடுத்து மனம்கலங்கி பதுங்கிச் சோர்ந்தன
கயலெழுந்து வாழுமோடும் அலைகடல்தனின் - கூட
ஊயரெழுந்து ஓடிக் கரும்படைகள் ஆண்டன
தயவெழுந்து இன்று எம்மைக் காக்க வாருங்கள் - எங்கள்
தரை, கடலும் வானும் மீட்கும் திறனைத்தாருங்கள்

கிரிகாசன்

Friday, June 7, 2013

தீ பரவட்டும்


ஒற்றுமை என்பது வெற்றித்திருமகள் 
நெற்றியிலிட்ட திலகம் - தமிழ்ப்
பற்றினைக் கொண்டெழு ஒன்றெனச் சேர்ந்திடு 
கிட்டிடும் வாழ்வி லுதயம் - உயர்
நற்றமிழோ உந்தன் நாவில் புரளினும் 
இரத்தத்திலே கொண்டவீரம் - அதை
விற்றிடவோ விலைபேசிடவோ உந்தன் 
சொத்தில்லை பாரம்பரியம்

வேற்றுமை விட்டணி செல்வாய் அதுவுந்தன்
வாழ்வினுக்கோர் அத்திவாரம்
சுற்றி மனங்கொண்ட செந்தீ எழுந்துயிர் 
கொள்ளும் சுதந்திர தாகம் - வெறும்
புற்றினில் சீறிடும் பாம்பின் விசம்விடப் 
பொல்லாவெறியரின் மோகம் - இனி
முற்றும் எனத்துயர் கொள்வதை கண்டிட 
முன்னெழுந்தார் இவர் வீரம்

பற்றிஎரியும் அடிவயிற்றி லெழும்
பாசமிகுந் தவர் தீயும்- பல
கற்றிடும் மாணவர் உள்ளம் பிடித்திடக் 
காற்றினிலே பெரிதாகும் - தீயைப் 
பெற்றிடும் செந்தமிழ் செல்வங்களே இனி 
முற்று மெரிந்திடும் நீசம் - நீவிர்
ஏற்றிடும் தியாகத்தின் தீயும் சுதந்திரம் 
வெற்றிவரை தொடரட்டும்

செங்குருதி சிந்தப் பெண்களுயிரைக் 
குடித்தவன் பஞ்சணை மீதும் - அவன்
தங்கமுடி தலைகொண்டர சாளவும் 
தாழ்ந்து நலிவதோ நாமும் - இனி 
சங்கு ஒலித்திடப் பொங்கியெழுந்திடு 
சந்தண மார்பெடு தீரம் பெண்ணே
பொங்கிப் புறப்படு மாணவர்கள் திசை 
செல்லும்வழி வரும்தீர்வும்

கிரிகாசன்

தமிழீழத்தின் தேசியக் கொடியும் கீதமும்


ஏறுது பார் கொடி ஏறுதுபார்
ஏறுது பார் கொடி ஏறுதுபார் - இங்கு
ஏறுது பார் கொடி ஏறுதுபார் - தமிழ்
ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி - எட்டு
திக்கிலும் மானத்தைச் சேர்த்த கொடி
காலத்தை வென்றுமே நின்ற கொடி
புலி காட்டிய பாதையில் சென்ற கொடி

ஏறுது பார் கொடி ஏறுதுபார்

செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே
வீறிடும் கொடியிது - தமிழ்
மக்களைக் காத்த நம்மான மாவீரரை
வாழ்த்திடும் கொடியிது
புலி வீரத்தின் கொடியிது
மாவீரரின் கொடியிது

எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்
ஏறிய கொடியிது - பெரும்
சத்திய வேள்வியில் செத்தவர் மீதினில்
சாத்திய கொடியிது
தமிழ் ஈழத்தின் கொடியிது
புலி ஏந்திய கொடியிது

சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய
சாதனைக் கொடியிது - சங்கு
ஊதி முழங்கிட ஊர்மனையாவிலும்
உலவிய கொடியிது
சமதர்மத்தின் கொடியிது
எங்கள் தாயவள் கொடியிது

ஆயிரம் ஆயிரம் வீறென வேங்கைகள்
ஆக்கிய கொடியிது - பிரபாகரன்
என்றிடும் காவிய நாயகன்
போற்றிடும் கொடியிது
தமிழ் தேசத்தின் கொடியிது
எங்கள் தேசிய கொடியிது 
எங்கள் தேசிய கொடியிது
எங்கள் தேசிய கொடியிது

Thursday, June 6, 2013

தமிழீழ தேசியக்கொடி


வீரத் தேசக் கொடிபறக்குது  விண்ணில்பாரடா - அது
வீறெழுந்து படபடக்கும் வேகம் காணடா!
தீரங் கொண்டு துடிதுடித்துச் சொல்வதென்னடா - அது
தேடியுன்னை நடநடென்று திக்கைக் காட்டுதா!
தீரர் நேசமைந்தர்  கொண்ட திண்மை கூறுதா - நின்று
தீயைப்போல தீமைகொன்ற தூய்மை சொல்லுதா?
ஊரைக் காத்த தெய்வமெண்ணி உள்ளம்சோருதா - இல்லை
உண்மைகண்டு ஒங்கிமீண்டும் உயர்பறக்குதா?

என்ன சொல்லத் துடிதுடிக்கு தென்றுகேளடா - அது
எத்தர்கூட்டம்  ஏனிங்கென்று எம்மைக் கேட்குதா?
மன்னன் ஆள வன்னிமண்ணில் நின்ற கொடியிதா - அங்கு
மற்றவர்க்கு என்னவேலை மண்ணில் என்குதா?
கன்னம் வைக்கும் கள்ளர் கூட்டம் கண்டு பொங்கியே -அது
கண்சிவந்து காற்றிலாடிக் காணும் தோற்றமா?
சின்னப் பெண்கள் மேனிதீண்டி சுட்டெரிக்கையில் - தானும்
சீறிமேனி செம்மை கொண்ட செய்கை கூறுதா?

தூக்கமின்றித் தொட்டுஓடும் தென்றல் போலவே - நீயும்
துள்ளியோடித் தூயமண்ணைக் காக்கச் சொல்லுதா?
ஆக்கமின்றி அன்னைபூமி இன்னல் காண்கையில் - வாழ்வில்
ஆனதென்ன மூலையோரம் அண்டிச் சோர்வதா?
தீக்குள் கையை வைத்தாகத் துள்ளி ஓடியே - உந்தன்
தேசம்காக்க திண்ணம் கொள்ளு திரள்வதொன்றுதான்
பூக்கும் மக்கள் புரட்சியொன்றே புதியபாதையில் - ஈழம்
போகும் பாதை காட்டும் என்று புன்னகைக்குதா?

தாய்க்குப் பிள்ளை நீயன்றோஇத் தாங்கும்பூமியில் இன்னும்
தஞ்சம் கேட்டு அகதியென்று தமிழிருக்கையில்
ஏய்க்கும்கூட்டம் ஏன் வளர்ச்சி கொள்ளுதென்குதா - அது
ஏன் நிலைத்து இன்னும்காணுதென்று துள்ளுதா
போய்மடைத் தனத்தைக் கொண்டு பிச்சைபோட்டதை - நீயும்
பசியெடுத்து உண்ட பாசம் பழியெடுக்குதா
நாய் பசிக்க நாலும்முண்ணும் நாமிருப்பதா - வேங்கை
நாள்முழுக்க ஊணொறுத்தும் புல்லை தின்னுமா

தேனினிக்கும் தேடியுண்ணு தின்னவும்கனி - யாரும்
தோலுரித்து வைப்பதில்லை நீயெடுத்துரி
நானிலத்தில் நீசுதந் திரத்தை நாடிடில் - உள்ள
நாள் சிறுத்துப்போகமுன்னர் நீதியின் வழி
போநினைந்து கொள் அடம்பன் பல்திரள்கொடி போல
பூமியில் திரள்பலத்தில் பொங்கி நீதியை
தானிணைந்து கேட்டலைந்து தட்டுகதவுகள் - உந்தன்
தலைமுறைக்கு விடுதலைக்கு வரும் ஒளிகதிர்.

கவிஞர்:கிரிஷாசன்

முப்படை தந்தான்


மும்மனி தந்தான் புத்தன்
முப்பால் தந்தான் வள்ளுவன்
மும்பழம் தந்தாள் ஒளவை

முத்தொழிலுக்கு மும்மூர்த்திகள் என்றனர்
முப்பெரும் தேவிகளுக்கும் 
முத்துறைகள் கொடுத்தனர்

மூவேந்தர்கள் ஆண்டனர்
ஆனாலும் தமிழ் தேசியம்
உலகமும் அறியவில்லை
தமிழனும் அறியவில்லை

முப்படை தந்தான் தலைவன்,
தமிழ் தேசியம் தமிழனும் அறிந்தான்
உலகமும் அறிகிறது….

“தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை”


தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!
தலைமீது சுமக்கின்றான்
அடிமை என்னும் சொல்லை!
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!
எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்!
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்!

இசை தெலுங்கானது பாட்டினிலே!
இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!
திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!
தீந்தமிழ் எரியுது தீயினிலே!

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்!
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!

உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம் போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன!

காசி ஆனந்தன்

Wednesday, June 5, 2013

யார் இவர்கள்? துரோகிகள்…


விடுதலையை விரும்பாதவர்கள் - அதை
விலைபேசி விற்றவர்கள்!
விடுதலைவந்துவிட்டால்
செல்லாக் காசுகள்

எதிரணியிலிருந்தாலும்
வெத்து வேட்டுக்கள்!
எச்சில் எலும்புக்காய் - குரைக்கும்
விசுவாச வீரர்கள்!

வரலாறு வாழுமென்பதை மறந்த

எட்டப்ப புத்திரர்கள்!
வாழ்வாங்கு வாழ்ந்தாலும்
வாழும்போதே இறந்தவர்கள்!

தன் சகோதரனால்
சட்டை கிளிந்ததென்று!
தன் தாயின்(ஈழம்)
சேலையை உரிந்தவர்கள்!

தனிப்பட்ட இழப்புக்காய்
தாய்மண்ணை இகழ்பவர்கள்!
இரண்டாம்முறை யேசுவந்தாலும்
இவர்களையினி மன்னிப்பாரா ?

கதிர்காமருக்கு சிங்களம் சிலைவைக்கவில்லை!
அவரொரு தேசத்தியாகி என்று!
ஈழம் இவர்கட்கு சிலைவைக்கும்
இவர்களொரு தேசத்துரோகிகள் என்று!

ஒன்றுமட்டும் உண்மை…
இரண்டாயிரமாண்டுகள் தாண்டியும்
யூதாஸ் யூதருக்கு துரோகிதான்.
இரண்டு கோடியாண்டுகளானாலும்
நீங்கள் தமிழருக்கு துரோகிதான்
நீங்கள் விரோதிதான்!

கவிஞர்:யாழ்.சங்கர்

உண்டு விடுதலைப் போர் உண்டு…!


வீறுடையான் பிரபாகரன்
ஈழ விடுதலை யாளனாய்
விளைந்த

பேறுடையான் இன மானமே
உயிரைய்ப் பேணும் ஆற்றலான்
வலிமை

நூறுடையான் கொடுஞ் சிங்களம்
நடுங்கும் தோளினான் விழும்பகை
உடலின்

நீறுடையான் விடுதலைப் போர்
தொடரும்…நிகழும்பார் புலிப்படை
வரவே!

தாய் நிகர்த்த எழிலார் தமிழ்
ஈழம் தலை நிமிர்ந்தெழ இவன்
எழுந்தான்!

தியணையான் பிரபாகரன்
வீரர் தமிழ்ப்படை திரட்டினான்…
நிமிர்தான்!

பாய் புலியோ என நாள்தொறும்
நூறு பன்னூறு போர்க்களம் இவன் 
பார்த்தான் !

ஆயிரமாய் உயிர் சாயலாம்
ஓயுமோ இவன் படை சாயுமோ
அம்மா!

பொறுத்திருப்பீர்… பிரபாகரன்
புலிகள் போர் உண்டு விரைவில்
உண்டு!

நிறுத்திய போர் மறுபடியும்
நிகழும்! அறத்தின் போர் நிகழும்!
நிகழும்!

மறுத்துரைப்பார் புலிப் போர்க்களம்
காண்பார்! மிகவிரைவில் காண்பார்!
காண்பார்!

அறுத்தெறிவோம் கைவிலங்கை!
ஆணை! தமிழீழ மீதாணை!
ஆணை!

காசி ஆனந்தன்

Tuesday, June 4, 2013

இருப்பாய் தமிழா நெருப்பாய்!


இருப்பாய் தமிழா நெருப்பாய்!
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!
இருப்பாய் தமிழா நெருப்பாய்!

குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!

கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா
கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்? - இனப்போர்
செய்யக் களம்வாடா கொடுமை தூள்படும்
சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!

வெல்லமோடா உயிர் உனக்கு? புவிகாண
வீறுகொண்டு போர் இடடா! - தமிழர்
உள்ளம் மகிழ நீ களத்தில் நடடா
உயிரையும் தூக்கிக் கொடடா!

வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின் 
வல்லமை உன் பகை உடைக்கும்! - அட
நெஞ்சில் தமிழ்வீரம் பொங்க நில்லடா!
நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்!

காசி ஆனந்தன்

சங்கே முழங்கு!



நேர்மையினான்… ஆதலினால்
வலிய பகை நேர்வரினும்
எதிர்த்து மோதும்
ஓர்மையினான்! காலத்தை
ஊடறுத்துத் தொலைநோக்கும்
கண் ஓட்டத்தில்
கூர்மையினான்! தமிழீழம்
எழ எழுந்து கூண்டுடைத்த 
மான வாழ்வின்
சீர்மையினான்! எந்தலைவன்
பிரபாகரன் கீர்த்தி
முழங்கு சங்கே!

அலைநிகர்த்தான் தொடர்தொடராய் 
படைவரிசை திரட்டி எழும்
ஆற்றல் தன்னில்!
உலைநிகர்த்தான் படைக்கருவி
வகைவகையாய் உருவாக்கும்
தொழில் நுட்பத்தில்!
வலைநிகர்த்தான் சூழ்ச்சியினால்
எதிரிகளை வளைத்தழிக்கும்
போர்த் திறத்தில்!
மலைநிகர்த்தான்! எந்தலைவன்
பிரபாகரன் மாண்பை
ஊது சங்கே!

மொழிமறவான்! இனம்மறவான்! 
பகைமொத்த நீர்பொழியும்
தமிழீழத் தாய்
விழிமறவான்! தமிழ்மாந்தர்
உயிர்பறித்து வெறியாடும்
கொடிய மாற்றார்
பழிமறவான்! களமாடி
எதிர்த்தபகை அழித்தொழிக்கும்
தமிழ் மறத்தின்
வழிமறவான்! எந்தலைவன்
பிரபாகரன் வலிமை
உறுமு சங்கே!

அடிதருவான்… எனினும் உயிர் 
பிழைத்திடுக என அயலார்
படைக்கும் காலம்
நொடிதருவான்! களத்துமிசை
உறவிழந்து நொந்த தமிழ்
மழலைக்குத் தன்
மடிதருவான்! போர் மறவன்
ஆயினும் மண் மீதிலிவன்
அன்பொன்றுக்கே
பிடிதருவான்! எந்தலைவன்
பிரபாகரன் பெருமை
கூவு சங்கே!

வீறுடையான்! தமிழ் வேங்கை! 
கொடிய பகை வீழ்த்தி எழும்
போரின் ஆற்றல்
நூறுடையான்! மாற்றார்தம்
பாசறையை நொடிப்பொழுதில்
எரித்த சாம்பல்
நீறுடையான்! தமிழீழம்
நிறுவியவன் எனவரலாற்
றேட்டில் நிற்கும்
பேறுடையான்! எந்தலைவன்
பிரபாகரன் வீரம்
பிளிறு சங்கே!

காசி ஆனந்தன்

உயிர் தந்து மரணத்தை வென்றவர் !



உலகின் திசையெங்கும் 
ஊர்கள்தான் பிரிந்து
கண்கள் கார் பொழிய
கரைகள் தெரியாது

யாரும் துணைக்கின்றி
துடித்துத் தவித்த நாம்
துயர் சூழ்ந்து வாழ்விழந்து
துன்பத்தில் உழல்கையிலே
விம்பத்து வாழ்வென்று
எம் நெஞ்சத்துள் தீமூட்டி
தம் உடலோடு உயிரீந்த
மானிடத்துள் ஞானிதரே
மரணத்தை வென்றவரே !

மரணத்தை வென்றெங்கள்
உயிருக்குள் ஒளியானோர்
புகழ் பாடும் தகுதியற்ற
நிழல் தேடும் மானிடர் நாம்
புனிதர்களே நீங்கள்
மரணத்தை வென்றவர்கள்
மானுடம் காத்தவர்கள் !

உயிர்ப் பூவை ஊதிவிட்டு
ஒளிப் பூவை எமக்காக்கி
எம் நெஞ்சத்து மனவெளியில்
நீக்கமற நிறைந்துவிட்டீர்
நிலைத்திருக்கும் உங்களது
பெரும் செயல்கள் தாய்மண்ணில்! 
பெயர்ந்த தமிழினமும்
தாம் வாழும் தேசமெங்கும்
புகழ் பாடித் தாள் பணியும்
ஓரழகும் பேரழகாய்
உலகினிலே திகழ்கிறது !

ஆதியாய் அநாதியாய்
அவதரித்த செந்தமிழை
யார் வந்து தடுத்தாலும்
எவர் வந்து தடுத்தாலும்
உயிரீந்து தடுப்பதொன்றே
உயர்வென்று சென்றவரே
மானிடத்துள் ஞானிதரே
மரணத்தை வென்றவரே !
அடிமுடி அறிந்திட முடியாத
அற்புதச் சோதிகளாய்
கடலிலும் தரையிலுமாய்
கண்ணிமைக்கும் பொழுதினிலே
எம் நெஞ்சம் பிளந்து விட்டு
நெருப்பாகிப் போனவரே
மானிடத்துள் ஞானிதரே
மரணத்தை வென்றவரே !

தமிழீழத்தின் பிறப்புக்காய்
ஈகத்தில் உயரீகம்
உயிர்க்கொடையை ஏற்றுச்சென்று
தமிழ்க்குலத்தைக் காத்து நின்று
தண்ணொளியர்ய் எம் வெளியில்
தருமத்தின் தலை காக்கும்
எம் தமிழ்க்குலத்து வீரர்களே
மானிடத்துள் ஞானிதரே
மரணத்தை வென்றவரே !

கவிஞர்:மா.பாஸ்கரன்

Monday, June 3, 2013

ஒருநாள் வரும்



செங்குருதி சீறிவிழச் சிரித்திடவோ மன்னா
எங்கிருந்து கற்றாய் இந் நீதி
அங்கு ருசி என்றுநிதம் ஆக்கஉடல் பாதி
எங்கள்விதி என்றிடவோ மீறி
தங்கமுடி கொண்டு தமிழ் ஆண்டவளே தேவி
சங்க குலஅன்னைதமிழ் காண்நீ
வெங்களங்கள் கண்டவர்கள் வெல்லுமிவர் சாதி
பொங்குதமிழ் எண்ணு அதைமீறி

உங்களிறை கண்ணயர்ந்து கீழுறங்க போதி
எம்கை தனில் ஏதுமற்ற நாதி
மங்கையவள் மானங்கெட ஆடைகளை வாய்நீ
எங்கள் கரம் போடவில்லை சோழி
வங்ககடல் பொங்கியெழும் எங்களினம் ஆதி
சங்கரனின் கண்ணெழுவ தாய்தீ
நங்கூர மிட்டுனது கோரம் முடிவாகி
பங்கு விலைபேசி வரும் நீதி

தெங்குவளர் செந்தமிழம் தெரியுமோர் சோதி
சங்கொலியும் முழஙுகுமொரு சேதி
பொங்குகடல் நீர்கடந்து பேருதவி நாடி
எங்களிடம் வந்துதவும் தேதி
அங்கொருநாள் தொங்குங் கனி பாலில்விழத் தேனில்
எங்கும் மழை தூறலெனப் பார்நீ
தங்கமுடி சூடித்தமிழ் தலைநிமிரச் சோழர்வகை
சிங்கமிலைக் கொடிபறக்கும் பார்நீ

கவிஞர் - கிரிகாசன்

விழித்தெழு



விழித்தெழு தமிழா வியன்தரு வுலகில்
விளைவன துயராகும்
கழித்தனை காலம் கடுமிருள் நடுவே
கடையெனத் தமிழ் காணும்
பழித்தன ருணர்வைப் பறித்தன ருரிமை
பலப்பல அயல்நாடும்
அழித்தனர் இனமென் றாருயிர் தமிழர்
அடைந்தனர் பேரவலம்

நடந்தனை நடையில் நாட்டினை யாளும்
நயமெழப் பெருமையுடன்
இடந்தனைத் தரவே யிலையிந்த உலகும்
எழுந்துனைப் பந்தாடும்
தடந்தனைப் போட்டும் தமிழ்இனம் வீழ்த்தி
தவித்திட உனையாக்கக்
கிடந்தனை இருளில் கலங்கிய நினைவில்
கனவுகள் மேலோங்க

பொழுதினி உதயம் புதுவொளி காண்பாய்
புலர்ந்திடு மதிகாலை
அழுதிட வருமே அவைபொடிபடவே
அறமெடு விழிமூடின்
எழுமனதடங்கி இருந்திட எண்ணில்
இறுதியில் ஒருநாளில்
விழுவது நிகழும் வியன்தரு உலகில்
வல்லமை தான்வாழும்

இமையினுள் விழிபோ லெமதினி தமிழை
எடுத்தணைத் திடலின்றி
சுமையென விலகி சொலும் பிறமொழியில்
சிந்தனை பறிபோகா..
எமதினம் அடிமை எனவுறை உதிரம்
இனி. மெலச்சூடேற்றி
அமையொரு பாதை அடியெடு விரைவில்
அடுத்தது தமிழீழம் ஆளும்

கிரிகாசன்

இசைப்பிரியா, (கசங்கிய அனிச்சம்)



விடுதலை வேட்கைக்கு
“குர”ல் தந்த…
தமிழீழ ஊடகத்தின்
தாமரை முகமே!

ஈழ கொள்கையை
எத்திக்கும் 
ஏந்தி பயணித்த
ஏழிசை அகமே!!

உன்….
உடல் தின்று
உயிர் கொன்ற
பகையை நான் என்னச் செய்ய?

அந்த…
அரக்க குல
வன்முறை போரின்(?!)
வகையை நான் எங்குச் சொல்ல?

சில… கார்த்திகை பூக்களும்
என்… கண்ணீர் துளிகளும்
உன் காலடிக்கு காணிக்கை.

நான் சித்தன்

Sunday, June 2, 2013

அழியா ஜனனத்தில் ஆதவர்கள்



உள்ளமதை வேலியிட்டு உதிரத்தால் பாத்தி கட்டி
உரிமை விடிவிற்கென ஆதவர் ஆனவர் நாங்கள்
மரணம் எம்மை ஆழ்வதில்லை
விதையாகி எழுவோம்
விடியலையே தருவோம்

பாச உறவுகளே நீங்கள் ஏற்றிய சுடர் தீபம்
பரிமாறி தழுவுகிறது பக்குவமாய் எம் மனசை
நூலகச் சாலையிலே அடுக்கப்பட்ட புத்தகங்களாய்
அக்கினிக் குஞ்சுகளின் கல்லேடுகள் இங்கே
எடுத்துப் படியுங்கள் உறவே
கல்லறைகள் என்று
கண்ணீரால் கரைத்துவிடாதீர்

வீழ்ந்த உடல் விதை குழிகளை
நீரூற்றி நனைக்கிறது
நீண்ட துளி மழை மேகம்
ஜனனத்தில் சூரியர்கள்
நாளை எழுதிடுவார் புது வேதம்

எமக்காக ஒளிரும் தீபங்களே
ஒளிமயமான இந்த ஏடுகளை
இருண்டவர் விழிகளுக்கே
தரவேண்டும் நீங்கள்

எமக்காக ஓசை தரும் மணிகளே
எழுச்சியின் உயர்ச்சியை ஏற்றம் இறைத்து
உலகெலாம் சொல்ல வேண்டும் நீங்கள்

எமக்காக சிந்தும் விழி நீர்ரலைகளே
விழலுக்கிறைத்த நீராய் இன்றி
மாற்றான் படை மூழ்கிட
ஓயாத அலையாய் எழவேண்டும் நீங்கள்

ஒளியும் ஒலியும் நீரலை விழியும்
செங்குருதி தோய்ந்த நிலத்தை
செப்பனிடும் என்றால்
மடை திறந்து பாயட்டும்
பகைமையை அறுக்கட்டும்

நதி எல்லாம் விதியென்று ஓடவில்லை
காடு மேடு எங்கிலும்
கானலை கரைத்தே ஓடுகிறது
விழிகளின் நதியிலும் விடியலுண்டு
துவண்ட மனசுக்குள்ளும் தூறலுண்டு
குளிர்காலக் கூதல் இனி எதற்கு
அஸ்தமனச் சூரியனுக்கும் அழைப் பெதற்கு
உயிரே உறவே, மௌனித்தது போதும்
கலக்கம் கனவையும் காயம் செய்யும்
சூரிய கிரணத்தில் ஆதவன் அழிவதில்லை

விழியின் நீர்ரலைகள் போர் வாழ் அல்ல
அது விடியலைத் தருவதும் அல்ல
விழிகளின் சிகப்பே விடியலை தொடும்
எடு கையில் இன்றே ஆயுதம்
எதிரியின் கையிலும் அதுதான்

இறைவனை போல் எம தண்ணன்
இடர் நீக்கி ஆழ்வதில் மன்னன்
தமிழீழத் தாயின் சபதத்தை முடித்திடுங்கள்
ஊர்க் களங்களை உலையிலிட்டு
போர்க்கள பூமியில் மோதுங்கள்
எதிரியின் பாசறை எரித்து
எல்லையை வகுத்துப் பாருங்கள்
அன்று தணியும் எங்கள் தமிழீழத் தாகம்

மரணம் எம்மை ஆழ்வதில்லை
விதையாகி எழுவோம்
விடியலையே தருவோம்.

கவிஞர்:வல்வை சுஜேன்

பேசும் மாவீரர் கல்லறைகள் !



நாம் புதைந்த இடத்தில்
இன்னும்
புழுதி அடங்கவில்லை
நீங்கள் தூக்கி சென்ற
எம்முடல்
ஈரம் காயவில்லை

இன்னும் கொதிக்கிறது
என் குருதி
எழுந்து போராட
உடலுடைந்து பிணமாய்
கிடக்கிறேன் கல்லறையில்
மனம் உடையாமல்

முடிந்தால் எனக்கோர் புது
உடல் தாருங்கள்
ஈழம் அமைக்கிறேன் பாருங்கள்
என் இனிய ஈழ உறவுகளே

என் கல்லறையில் - பூ
வைக்கும் பெண்டுகளே
உம் மானம் காக்க
வருகிறேன்
சிங்களவன் வாலை அடக்க
எழுகிறேன்

தீயில் நீராடிய என்
சகோதரன்
பக்கத்தில் உறங்குகிறான்
பாருங்கள்
கரும்புலியாய் வெடித்தவன்
அவன் உடல் கண்டிருக்க
மாட்டீர்கள்
அவன் உள்ளம் அறிவீர்கள்

தயினத்திற்காக துணிந்து
உயிரை ஆயுதமாக
கொடுத்த உங்களை போல்
ஓர் தாய் வயிற்றில்
ஓர் தாய் மண்ணில்
பிறந்த ஓர் தமிழன் தான்
அவன்
ஏன் உங்களால் முடியாது ..

மண்டியிட வேண்டாம்
நீங்கள்
மண்டியிடவா நாங்கள் மடிந்தோம்
எழுந்திடு தமிழா

கோழையாய் கொடிப்பிடிக்காதே
வீரனாய் வாழெடு
ஆயுதம் ஏந்து
என்னோடு தோழ் கொடு

ஆவியாய் உனக்கு பலமாய்
நானிருப்பேன்
எழுந்து வா தமிழா
ஈழம் காண்போம்

எம் தங்கைகள் எத்தனை
பேர் கயவன் காமத்திற்கு
கற்பிழந்து மானமிழந்து
தூக்கில் தொக்குகிறார்கள்

மனதை தொட்டு சொல்
உன் உதிரம்
கொதிக்கவில்லையா
அயல் நாடுகளில் அகதியாய்
அடிமையாய் இருக்காதே
உடைத்தெறி வேலிகளை
பாதை பிறக்கும்

எங்கள் ஆவிகள் உங்கள்
தோட்டாக்களில்
எதிரியின் மார்பை துளைக்கும்
நீ மார்பு தட்டி எழுந்தால்

எம் இனம் காக்க 
வா தமிழா
எம் கல்லறையில்
சத்தியம் தா தமிழா!
சத்தியம் தா தமிழா!

கவிஞர்:கார் முகிலன்

Saturday, June 1, 2013

வியக்கிறேன் உன் விதி கண்டு..



வீரனே
வியக்கிறேன்
உன் விதி கண்டு
பிறக்கும் போதே
எழுதி வைத்தானா
நீ எம் விடியலுக்காய்
விழப்போகும் விதை என்று
சொல் வீரனே

பச்சிளம் குழந்தையிலே
என்னைப்போல் நீயும்
தாய்ப்பால் தானே
உண்டாய்
எனக்கு வராத
விதி உனக்கேன்
எனக்கு வராத
அந்த புரட்சி தீ
உனக்குள் யார் மூட்டினர்
சொல் வீரனே
வியக்கிறேன் உன் விதி கண்டு

பள்ளி பருவத்திலே
எவர் மேல் கொண்டாய்
காதல்
இளம் கன்னியர் மீதா
இல்லை இந்த ஈழ
தாயின் மீதா
சொல் வீரனே
உன் சின்ன சின்ன
ஆசைகள்
என்னவென்று
உன் கல்லறை வாசல்
தட்டி கேட்டு
அத்தனையும் உனக்கு
நான் செய்ய வேண்டும்
சொல் வீரனே

உனக்கு பிடித்த
பூ கார்த்திகை பூவா
அதனால் தான்
எனக்கு கிடைக்காத
அந்த மாவீர
பிறப்பை நீ
எடுத்து கொண்டாயா
சொல் வீரனே
உன் விதி கண்டு
வியர்கிறேன்

வீரனே
உனக்குள்ளேயும்
ஆசைகள் ஆயிரம்
இருந்திருக்கும்
ஆனாலும் அந்த
ஆசைகளுக்கெல்லாம்
தீ மூட்டி
அணையாத விடுதலை
தீயாய் உன் கண்ணில்
பற்ற வைத்து நின்றயே
உன்னை நினைத்தாலே
உடம்பில் உரம்
ஏறும்

என் ஆசை,
நான் உன் கல்லறை
தொழுது, அழுது
சொல்லி வைக்கிறேன்
வீரனே
அடுத்து ஒரு
ஜென்மம் வந்தால்
அன்னையாய் உன்னை
நான் தாங்க
வேண்டும்
அப்படி ஒரு ஜென்மம்
இல்லாமல் போனால்
நான் என்றுமே
பிறவாமல் வேண்டும்..

பூங்காற்றே
பூங்காற்றே 
பூவிடம் நீ சொல்லு 
போராடி விழுந்தானே
அவன் கல்லறை சேர் என்று

கவிஞர்:ஈழமகள்

தழலிடு!



காட்டிக் கொடுப்பவன் எங்கே? - அந்தக் 
கயவனைக் கொண்டு வா! தூணோடு கட்டு! 
சாட்டை எடுத்துவா இங்கே! - தம்பி 
சாகும்வரை அடி பின்பு கொளுத்து! 

அன்னைத் தமிழை மறந்தான்! - பாவி 
அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்! 
என்ன கொடுமை இழைத்தான்! - தீயன் 
எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்! 

மாற்றார்க் கழைப்பு விடுத்தான்! - வீட்டில் 
மதுவும் கொடுத்தான்! மகளும் கொடுத்தான்! 
சோற்றுப் பதவிகள் ஏற்றான்! - மானம் 
தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்! 

பல்லாயிரம் நாட் பயிரை - வீரம் 
பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை 
எல்லாம் நிறைந்த தமிழை - தழலில் 
இட்டவன் உடல்மேல் இடடா தழலை! 

தீயன் உடல்தீயத் தீவை! - எங்கள் 
தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை! 
பாயும் புலியே! தமிழா! - தம்பி! 
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!

கவிஞர்: காசி ஆனந்தன்