விடுதலையை விரும்பாதவர்கள் - அதை
விலைபேசி விற்றவர்கள்!
விடுதலைவந்துவிட்டால்
செல்லாக் காசுகள்
எதிரணியிலிருந்தாலும்
வெத்து வேட்டுக்கள்!
எச்சில் எலும்புக்காய் - குரைக்கும்
விசுவாச வீரர்கள்!
வரலாறு வாழுமென்பதை மறந்த
எட்டப்ப புத்திரர்கள்!
வாழ்வாங்கு வாழ்ந்தாலும்
வாழும்போதே இறந்தவர்கள்!
தன் சகோதரனால்
சட்டை கிளிந்ததென்று!
தன் தாயின்(ஈழம்)
சேலையை உரிந்தவர்கள்!
தனிப்பட்ட இழப்புக்காய்
தாய்மண்ணை இகழ்பவர்கள்!
இரண்டாம்முறை யேசுவந்தாலும்
இவர்களையினி மன்னிப்பாரா ?
கதிர்காமருக்கு சிங்களம் சிலைவைக்கவில்லை!
அவரொரு தேசத்தியாகி என்று!
ஈழம் இவர்கட்கு சிலைவைக்கும்
இவர்களொரு தேசத்துரோகிகள் என்று!
ஒன்றுமட்டும் உண்மை…
இரண்டாயிரமாண்டுகள் தாண்டியும்
யூதாஸ் யூதருக்கு துரோகிதான்.
இரண்டு கோடியாண்டுகளானாலும்
நீங்கள் தமிழருக்கு துரோகிதான்
நீங்கள் விரோதிதான்!
கவிஞர்:யாழ்.சங்கர்