Wednesday, May 15, 2013

நெருப்புமிழ்ந்த மே 18...



இருப்பிழந்த இனத்தின் மேல் 
பேரினவாதம் 
நெருப்புமிழ்ந்த மே 18... 
நிஜங்களைத் தொலைத்துவிட்டு 
வலிகளை வாங்கிவந்த மே 18 
முடக்கப்பட்டுவிட்ட 
எம்மினத்தின் 
முகவரிகளைத் தான் தேடியலைகின்றோம்.. 
ஒவ்வொருவரும்.... 
உறவுகளை இழந்து 
உரிமைகளைத் தொலைத்து 
ஊமைகளாக வாழ்கின்ற 
எங்களைத் தழுவிச் செல்லும் 
காற்றே......... 
சற்று நின்று 
இரத்தமும் சதையும் மக்கிப் போய். 
மண்ணோடு மண்ணான 
எங்கள் உறவுகளின் தொகையை ஒரு முறை 
உலகுக்குச் சொல்வாயா??? 

சாஹாரா