Sunday, June 2, 2013

பேசும் மாவீரர் கல்லறைகள் !



நாம் புதைந்த இடத்தில்
இன்னும்
புழுதி அடங்கவில்லை
நீங்கள் தூக்கி சென்ற
எம்முடல்
ஈரம் காயவில்லை

இன்னும் கொதிக்கிறது
என் குருதி
எழுந்து போராட
உடலுடைந்து பிணமாய்
கிடக்கிறேன் கல்லறையில்
மனம் உடையாமல்

முடிந்தால் எனக்கோர் புது
உடல் தாருங்கள்
ஈழம் அமைக்கிறேன் பாருங்கள்
என் இனிய ஈழ உறவுகளே

என் கல்லறையில் - பூ
வைக்கும் பெண்டுகளே
உம் மானம் காக்க
வருகிறேன்
சிங்களவன் வாலை அடக்க
எழுகிறேன்

தீயில் நீராடிய என்
சகோதரன்
பக்கத்தில் உறங்குகிறான்
பாருங்கள்
கரும்புலியாய் வெடித்தவன்
அவன் உடல் கண்டிருக்க
மாட்டீர்கள்
அவன் உள்ளம் அறிவீர்கள்

தயினத்திற்காக துணிந்து
உயிரை ஆயுதமாக
கொடுத்த உங்களை போல்
ஓர் தாய் வயிற்றில்
ஓர் தாய் மண்ணில்
பிறந்த ஓர் தமிழன் தான்
அவன்
ஏன் உங்களால் முடியாது ..

மண்டியிட வேண்டாம்
நீங்கள்
மண்டியிடவா நாங்கள் மடிந்தோம்
எழுந்திடு தமிழா

கோழையாய் கொடிப்பிடிக்காதே
வீரனாய் வாழெடு
ஆயுதம் ஏந்து
என்னோடு தோழ் கொடு

ஆவியாய் உனக்கு பலமாய்
நானிருப்பேன்
எழுந்து வா தமிழா
ஈழம் காண்போம்

எம் தங்கைகள் எத்தனை
பேர் கயவன் காமத்திற்கு
கற்பிழந்து மானமிழந்து
தூக்கில் தொக்குகிறார்கள்

மனதை தொட்டு சொல்
உன் உதிரம்
கொதிக்கவில்லையா
அயல் நாடுகளில் அகதியாய்
அடிமையாய் இருக்காதே
உடைத்தெறி வேலிகளை
பாதை பிறக்கும்

எங்கள் ஆவிகள் உங்கள்
தோட்டாக்களில்
எதிரியின் மார்பை துளைக்கும்
நீ மார்பு தட்டி எழுந்தால்

எம் இனம் காக்க 
வா தமிழா
எம் கல்லறையில்
சத்தியம் தா தமிழா!
சத்தியம் தா தமிழா!

கவிஞர்:கார் முகிலன்