Saturday, June 1, 2013

தழலிடு!



காட்டிக் கொடுப்பவன் எங்கே? - அந்தக் 
கயவனைக் கொண்டு வா! தூணோடு கட்டு! 
சாட்டை எடுத்துவா இங்கே! - தம்பி 
சாகும்வரை அடி பின்பு கொளுத்து! 

அன்னைத் தமிழை மறந்தான்! - பாவி 
அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்! 
என்ன கொடுமை இழைத்தான்! - தீயன் 
எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்! 

மாற்றார்க் கழைப்பு விடுத்தான்! - வீட்டில் 
மதுவும் கொடுத்தான்! மகளும் கொடுத்தான்! 
சோற்றுப் பதவிகள் ஏற்றான்! - மானம் 
தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்! 

பல்லாயிரம் நாட் பயிரை - வீரம் 
பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை 
எல்லாம் நிறைந்த தமிழை - தழலில் 
இட்டவன் உடல்மேல் இடடா தழலை! 

தீயன் உடல்தீயத் தீவை! - எங்கள் 
தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை! 
பாயும் புலியே! தமிழா! - தம்பி! 
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!

கவிஞர்: காசி ஆனந்தன்