Tuesday, May 21, 2013

இன்றைய நாளை நாம் அரச பயங்கரவாத எதிர்ப்புத் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும்



ராஜீவ் காந்தியின் மரணமே தமிழ் மக்களின் விடுதலைப்போரை இரு தசாப்தங்களுக்கு காப்பாற்றியது என்று கூறினால் அது மிகையாகாது. 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் அவர் மீண்டும் பதவிக்கு வந்திருந்தால் 1992 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த வருடங்களிலோ முள்ளிவாய்க்கால் போன்ற இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கும். அன்று தமிழீழத் தேசியத் தலைவரின் தலையைக் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டவர் தான் ராஜீவ் காந்தி.

ஈழத்தில் நூற்றுக்கணக்கான விலை மதிக்க முடியாத தமிழீழப் பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடியவர் தான் ராஜீவ் காந்தி, அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான விலை மதிக்க முடியாத அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைப் பலியெடுத்தார். தங்களின் உயிரிலும் மேலாக விடுதலைப் போராட்டத்தை நேசித்தவர்கள் விடுதலைப்புலிகள், அவர்கள் தங்களை ராஜீவ் காந்தி காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையினால் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க விலை மதிக்க முடியாத மாணிக்கங்களாக தேசியத் தலைவராலும், மக்களாலும் நேசிக்கப்பட்டட நிராயுத பாணிகளாக இருந்த அந்தப் போராளிகளின் கொலைகளுக்கு காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. தமிழீழப் போராட்டத்தில் ஒற்றுமையுடன் போராடிய போராளிக் குழுக்களுக்குள் பிளவை ஏற்படுத்தி அவர்களுக்குள் மோதவிட்டு பல கொலைகள் இடம்பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவ்வாறு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகத்தை தமிழ் மக்களுக்குச் செய்திருந்தார் ராஜீவ் காந்தி. மேலும் தீலிபன், அன்னை பூபதி என்று அனைவரின் அஹிம்சைப் போராட்டத்தையும் துச்சமாகக் கருதினார் ராஜீவ் காந்தி.

இன்று ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை தீவிரவாத எதிர்ப்புத் தினமாக காங்கிரஸ் கோமாளிகள் கடைப்பிடிக்கிறார்களாம். முதலில் ஈழத்தில் அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட போர்க்குற்றவாளியே ராஜீவ் காந்தி. உண்மையான பயங்கரவாதியும் அவரே. இப்போதெல்லாம் இனப்படுகொலையிலும், அரச பயங்கரவாதத்திலும் ஈடுபடும் குற்றவாளிகள் பெரிய தலைவர்களாகக் கருதப்படுகிறார்கள். அமெரிக்க எதிர்ப்புக் கொண்ட சில போர்க்குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படுகிறார்கள்.

சென்றவருடம் லைபீரியா நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தவர் சார்லஸ் டெய்லர் இவர் போர்க் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது, அதனைப் போன்று ஆர்மேனிய இனப்படுகொலை நிகழ்த்தியவருக்கும் இன்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட மிகமோசமான ஈவிரக்கமற்ற குற்றவாளி தான் ராஜீவ் காந்தி. இவர் மேற்கொண்ட குற்றங்களை விசாரணை மேற்கொண்டால் அவரின் கொடூரக் குற்றங்கள் உலகின் பார்வைக்கு அறியவரும்.

ராஜீவ் காந்தி எப்படி தமிழனுக்கு தலைவன் ஆகமுடியும்? தமிழினத்தை அழித்தும், தமிழீழப் பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடியவரை உண்மையில் நல்ல தமிழ் தாயின் மடியில் பிறந்தவன் தலைவன் என்று கூறமாட்டான். T20 உலகக்கிண்ணப் இறுதிப்போட்டியில் சிறிலங்கா தோல்வியடைந்து விட்டதனால் மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சார்ந்த தமிழ் இளைஞன் மனமுடைந்து தூக்குப் போட்டு இறந்தார். இவ்வாறு சில புத்திபிசங்கிய இந்திய தமிழர்கள் நமது இனத்தை அழித்தவர்கள் இவர்கள் என்று உணராமல் அவர்களை ஆதரிக்கிறார்கள். சோனியாவின் எச்சில் எழும்புத் துண்டிற்காக தமிழினத் துரோகிகளாக மாறி காங்கிரஸை ஆதரிக்கும் கொடியவர்களும் உள்ளனர்.

ராஜீவ் காந்தியின் சுயரூபத்தை மறைத்தும், அவரினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையும் மறைத்தும், அவரின் கொலையினைக் கூறி தமிழகத்தில் அரசியல் பிழைப்பு நடத்த முடியாத நிலமையுள்ளதை தமிழக காங்கிரஸார் உணரவேண்டும். ராஜீவ் காந்தியின் அரக்க ஆன்மா சாந்தியடைவதற்கு பல லட்சம் உயிர்களைப் பலியெடுத்தார் சோனியா காந்தி. அவர் இன்னமும் அடங்காமல் உயிர்களைப் பலியெடுக்க நிற்கிறார். பெண் இனத்திற்கே இழுக்கை ஏற்படுத்தியவர் சோனியா காந்தி.

இன்று இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும், இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் கூறியுள்ளார். இலங்கையில் ஈழத் தமிழர்களோ, அல்லது புலிகளோ தோற்கவில்லை தோற்றது இந்தியாவின் இராஜதந்திரம்தான் என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக பழ.நெடுமாறன் அவர்கள் கூறிய வாக்கு இன்று நிஜமாகிவிட்டது. இதனை தற்போது இந்தியாவே ஒப்புக்கொண்டு விட்டது. இன்று இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தாங்கள் தோல்வியைக் கண்டுள்ளோம் என்று கூறும் இந்தியா இதற்கு காரணமானவர் ராஜீவ் காந்தி என்ற உண்மையை உணர்வார்களா? அன்றே தமிழீழத் தேசியத் தலைவர் இவை நடைபெறக் கூடாது என்பதற்காக இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே மோதலை ஏற்படுத்த வேண்டாம் அதனால் நன்மை அடையப் போவது சிங்களப் பேரினவாதமே என்று ராஜீவ் காந்தியிடம் கூறினார் ஆனால் ராஜீவ் காந்தி அவற்றைத் தட்டிக்கழித்து விட்டு போரை நடத்தி மக்களைக் கொன்று குவித்தார். அதன்பின்னரும் ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தியடையச் செய்வதற்காக முள்ளிவாய்க்காலில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார்கள் காங்கிரஸார். இன்று பழ.நெடுமாறன் அவர்கள் கூறிய நிலைக்கு வந்துவிட்டார்கள் இந்திய ஆளும்வர்க்கத்தினர். ஆனால் இவர்களின் கொலை வெறியாட்டங்களால் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் திருப்பி வந்துவிடுமா? வெகுவிரைவில் புலிகளை அழித்தமையினால் இன்று இலங்கையின் ஊடாக இந்தியாவிற்கு எதிரான சக்திகளின் ஆபத்தில் நாங்கள் சிக்கியுள்ளோம் என்று இந்திய அரசே ஒப்புக்கொள்ளும் நிலமை ஏற்படும். உண்மையில் அவ்வாறான நிலமையில் தான் இந்தியா இன்று இருக்கிறது ஆனால் அதனை வெளியே சொல்வதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

ராஜீவ் காந்தியின் செயல்பாடுகளே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வியைக் கண்டுள்ளது என்ற விடயம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் அழிவிற்கு காரணமாகிவிட்டார் கண்டிப்பாக உலகத்தமிழினம் இன்றைய நாளை அரச பயங்கரவாத எதிர்ப்புத் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

விஸ்வா

Monday, May 6, 2013

ராஜீவின் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை தூக்கில் போடவேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள், அன்று ஈழத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ராஜீவின் படையினரை தூக்கில் போடவேண்டும் என்று குரல் கொடுக்காதது ஏன்?


ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை உடனே தூக்கில் போடவேண்டும் என்று உரக்க குரல் கொடுத்து ஒற்றைக்காலில் நிற்பவர்கள், ஆயிரக்கணக்கான குற்றங்களில் ஈடுபட்ட ராஜீவ் காந்தியின் தலைமையிலான போர்க்குற்றவாளிகளைத் தூக்கில் போடவேண்டும் என்று உரக்க குரல் கொடுத்து ஒற்றைக்காலில் நிற்காதது ஏன்?

தேவேந்திர பால் சிங் புல்லார் என்பவரின் வழக்கில் அவரது மரண தண்டனையை உறுதி செய்திருந்திருக்கிறது இந்திய உச்ச நீதிமன்றம். இத் தீர்ப்பு பேரறிவாளன், முருகன், சாந்தன், ஆகிய மூவரின் கருணை மனு நிராகரிப்பு குறித்த வழக்கில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை இது ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பல விவாதங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. நேற்றைய தினம் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்படப் பேசு என்ற நிகழ்ச்சியில் இது தொடர்பான விவாதம் ஒன்று நடைபெற்றது அதில் கலந்துகொண்ட ஜி.சி. சேகர் என்ற பத்திரிகையாளர் ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களுக்குத் தூக்குத் தண்டனையை வழங்கப்படவேண்டும், ராஜீவ் காந்தியின் கொலையின் போது சிலர் கொல்லப்பட்டார்கள் அதனால் தூக்குத் தண்டனை வழங்கவேண்டும், ராஜீவ் காந்தியின் கொலையின் போது உங்களின் குடும்பம் பாதிக்கப்பட்டால் நீங்கள் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டாம் என்று கூறுவீர்களா? பயங்கரவாத செயலில் ஈடுபடுவர்களுக்குத் தூக்குத் தண்டனை கண்டிப்பாக வழங்கவேண்டும் என்று புத்திபிசங்கிய நிலையில் புலம்பினார் ஜி.சி. சேகர். இவரைப் போன்றே வடவரின் அடிவருடிகளான தமிழக காங்கிரஸாரும் இன்னும் சிலரும் கூறிவருகிறார்கள்.

நூற்றுக்கணக்கான விலை மதிக்க முடியாத பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடி அவர்களின் வயிற்றில் துப்பாக்கியினால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமானவர் ராஜீவ் காந்தி அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான விலை மதிக்க முடியாத அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களைப் பலியெடுத்தவர் தான் ராஜீவ் காந்தி. இவரின் தலைமையிலான படையினர் மேற்கொண்ட ஆயிரக்கணக்கான பயங்கரவாதப் போர்க்குற்றங்களுக்காக எத்தனை பேர் தூக்கில் போடப்பட்டார்கள் என்று ஜி.சி. சேகர். மற்றும் தமிழக காங்கிரஸாரால் கூறமுடியுமா? ஈழத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று ராஜீவ் காந்தியும் மற்றம் அவருடன் இணைந்து செயல்பட்டவர்களுக்கும் எதிராக விசாரணை நடத்தப்பட்டு தூக்கில் அவர்கள் போடப்பட்டார்களா? ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள் அவர்களுக்கு இன்றுவரை நீதி வழங்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களை துச்சமாகக் கருதிவிடமுடியுமா?

மஹிந்தவின் பாணியில் குற்றவாளிகளே தங்களின் போர்க்குற்றங்களை விசாரணை செய்துகொள்வதைப் போன்று அன்று இந்தியப் படை மேற்கொண்ட போர்க்குற்றங்களைத் தாங்களே விசாரணை செய்வோம் என்று கூறியவர்கள் எவருக்கும் சிறைத்தண்டனையோ அல்லது தூக்குத் தண்டனையோ ராஜீவ் காந்தியின் காலத்தில் வழங்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான கொலைகளும், நூற்றுக்கணக்கான பாலியல் வல்லுறவு குற்றங்களுக்காக எந்த விதமான விசாரணையும் எதிர்கொள்ளாமல் நானே ராஜா, நானே மந்திரி, நானே நீதிபதி என்று ராஜீவ் காந்தி உல்லாச வாழக்கையை வாழந்துகொண்டு இருந்தார். அவர் செய்த குற்றங்களுக்காக அவர் தண்டிக்கப்பட்டார், இதனைப் போன்ற கருத்தைத் தான் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை விசாரணை செய்த நீதிபதிகளும் கூறினார்கள், அதாவது இந்திய படையினர் ஈழத்தில் மேற்கொண்ட செயல்களின் பதிலடியாக ராஜீவ் காந்தியின் கொலை என்றார்கள். இதனைப் பற்றி சிந்தனை செய்யும் போது காசி ஆனந்தன் அவர்களின் கவிதை தான் ஞாபகம் வருகிறது

ஒருமை

சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி

சட்டம் கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி!

அதனைப் போன்று ராஜீவ் காந்தியின் கொலையல்ல, அது கொலை என்று சொல்லக்கூடாது, அது மரண தண்டனை, நாட்டுப்பற்றுள்ள இந்தியன் யாராவது இருந்திருந்தால் அவனே ராஜீவ் காந்திக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ராஜீவ் காந்தியின் கொலையை ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்திருந்தால் அது குற்றம் என்று கொளத்தூர் மணி அவர்கள் அன்று முத்துகுமாரின் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் கூறியிருந்தார்.

ராஜீவ் காந்தியின் தலைமையிலான படையினர் ஜி.சி. சேகர். மற்றும் தமிழக காங்கிரஸாரின் குடும்பத்தில் உள்ள பெண்களின் கற்பை சூறையாடி விட்டு அவர்களின் வயிற்றில் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்திருந்தால் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்களா? அல்லது விலை மதிக்க முடியாத மாணிக்கமான ராஜீவ் காந்தியையும் அவரின் படையினரையும் மன்னித்துவிடுங்கள் என்று கூறுவார்களா?

அன்று புலிகளுடன் இந்தியப் படையினர் யுத்தத்தினை ஆரம்பித்த போது தயவுசெய்து சிங்களப் பேரினவாதிகளுக்குத் துணை செல்லாமல் உடனடியாக யுத்தத்தினை நிறுத்துங்கள் என்று தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் கோரியும் ராஜீவ் காந்தி அதனைப் புறக்கணித்துவிட்டு புலிகளை அழித்துவிட்டு பிரபாகரனின் தலையைக் கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார், மேலும் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு யுத்தத்திலும் தோல்வியடைந்தும், போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டார் ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தியினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான சிறிய பட்டியல்தான் இது


21.10.1987 யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் சுமார் 60 பொதுமக்கள்.
10.10.1987 பிரம்படி (கொக்குவில்) படுகொலைகள் சுமார் 40 பொதுமக்கள். இவர்களை யுத்த ராங்கிகளாலும் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள்.
10.10.1987 கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலைகள் சுமார் 35 பொதுமக்கள்.
26.10.1987 அளவெட்டி இந்து ஆச்சிரம படுகொலைகள் சுமார் 17 பொதுமக்கள்.
27.10.1987 சாவகச்சேரி படுகொலைகள் சுமார் 67 பொதுமக்கள்.
19.01.1989 வல்வைமற்றும் ஊறணி வைத்தியசாலைப் படுகொலைகள். சுமார் 65 பொதுமக்கள்

அன்று வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டும், நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு பெருமளவான ஈழத்தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

சொல்லுங்கள் யார் குற்றவாளிகள்? குற்றம் செய்வதவரைத் தண்டித்தால் மட்டும் குற்றமா? அரசனுக்கு ஒரு நீதி குடிமக்களுக்கு ஒரு நீதியா? ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தூக்கில் போடவேண்டும் என்று கூறும் நீதிவான்களே ராஜீவ் காந்தியின் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அந்தக் குற்றவாளிகளைத் தூக்கில் போடவேண்டும் என்று உரக்க குரல் கொடுக்காதது ஏன்? இவற்றைப் பற்றிக் கேள்விகளை எழுப்புவதற்கு மறுக்கிறார்கள் அநீதிக்காரர்களான ஜி.சி. சேகர் போன்றவர்களும் மற்றும் தமிழகக் காங்கிரஸாரும். ராஜீவ் காந்தியின் உயிரை விட ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களும், தமிழ் பெண்களின் மானமும் தாழ்தது அல்ல என்பதை தமிழீழத் தேசியத்தலைவர் உணர்த்தினார்.

ராஜீவ் காந்தி மிகப்பெரிய தலைவர் அவரைக் கொலை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும், அவரின் கொலையின் போது சிலர் கொல்லப்பட்டார்கள் அதனால் கொலை செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பது போன்று தான் அன்று ராஜீவ் காந்தியின் பொன் உயிரைப் போன்று ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் பொன் உயிர்களைக் கொன்று குவித்த ராஜீவ் காந்தி முதல் ஆயிரக்கணக்கான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று புலிகளுக்கும் ஈழத்தமிழருக்கும் அந்த எண்ணம் இருந்தது. காந்தி தேசமாகவும், நீதியை நிலைநாட்டும் தேசமாகவும் இந்தியா இருந்திருந்தால் ராஜீவ் காந்தியையும் அவருடன் இணைந்து ஆயிரக்கணக்கான குற்றங்களில் ஈடுபட்ட போர்க்குற்றவாளிகளையும் முதலில் தூக்கில் போட்டிருந்தால் புலிகள் ராஜீவ் காந்தியைக் கொலை செய்திருக்கமாட்டார்கள்.

தமிழர்களைக் கொன்று குவிக்கலாம் ஆனால் தமிழர்களைக் கொன்று குவிப்பவர்கள் தண்டிக்கப்படக் கூடாது, அவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்படக் கூடாது என்பதில் என்ன நீதி இருக்கிறது? என்ன தர்மம் இருக்கிறது? தமிழர்களின் உயிர்கள் இலவசமானது யார் வேண்டும் என்றாலும் சுட்டுப் பழகலாம், கொன்று குவிக்கலாம், பெண்களைக் கறிபழித்துக் கொலை செய்யலாம் இதற்கெல்லாம் நீதி விசாரணையோ அல்லது தண்டனையோ இவற்றுக்கில்லை என்று சிங்களவர்களும் வடவர்களும் நடந்துகொள்ளுகிறார்கள்.

ராஜீவ் காந்தியின் அரக்க ஆனமா சாந்தியடைவதற்கு பல லட்சம் உயிர்களைப் பலியெடுத்தார் சோனியா காந்தி அது அடங்காமல் மூன்று உயிர்களைப் பலியெடுக்க நிற்கிறார். பேரறிவாளன், முருகன், சாந்தன், ஆகியவர்கள் ராஜீவ் காந்தியின் கொலையில் சம்பந்தமில்லாதவர்கள் அவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிப்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு அநீதியான சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் குற்றவாளிகளாக ஜோடிக்கப்பட்டு இன்று தூக்கில் போடுவதற்கு துடிக்கிறார்கள் அக்கிரமக்காரர்கள்.

ஈழத்தில் தமிழின அழிப்பை மேற்கொண்டார்கள், தமிழக மீனவர்களைக் கொன்று குவிப்பவர்களுக்கு ஆயுதம் கொடுத்து, அவர்களுக்கு பயிற்சிகளையும் கொடுத்து மீனவர்கள் கொலை செய்யப்படுவதனையும் தாக்குதல் நடத்தப்படுவதனையும் வேடிக்கைப் பார்க்கிறார்கள் வடவர்கள். மஹிந்தவை போர்க்குற்றவாளி என்று கூறி அவனை நீதிக்கு முன் கொண்டு சென்று விசாரணை செய்வதனை தடுக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு நீதி, உரிமைகள் கிடைக்கப் பெறாமல் இருப்பதனை தொடர்ந்து தடுக்கிறார்கள். தமிழக மீனவர்களைக் கொன்று குவிப்பவனை நீதிக்கு முன் நிறுத்த முடியாது என்று மறுக்கிறார்கள். ஆனால் ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை உடனே தூக்கில் போடவேண்டும் என்று உரக்க குரல் கொடுக்கிறார்கள். காங்கிரஸாரே தமிழக மீனவர்களைக் கொன்று குவிப்பவர்களை உடனே தூக்கில் போடவேண்டும் நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று உரக்க குரல் கொடுக்காதது ஏன்? வடவர்களும் சிங்களமும் தமிழர்களைக் கொன்று குவிப்பதில் ஒன்றாக ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்.

விஸ்வா

ராஜீவ் காந்தியின் கொலையினைக் கூறி இனி தமிழகத்தில் அரசியல் பிழைப்பு நடத்த முடியாத நிலமையுள்ளதை தமிழக காங்கிரஸார் உணரவேண்டும்




அடுத்த வருடம் தேர்தல் வரப்போவதனால் தமிழக காங்கிரஸார் மெல்ல மெல்ல ஈழத் தமிழர்களின் நலனைப் பற்றி பேசி நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அண்மையில் வட இந்திய எம்.பி.க்களின் குழுவினரின் இலங்கை பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஜெயந்தி நடராஜன் கோமாளித்தனமான கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். அதாவது மத்தியரசில் அமைச்சராக இருக்கும் ஜெயந்தி நடராஜன் நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருந்தார், அதனைப் போன்றே நவரச நடிகன் ப.சிதம்பரம் அவரும் ஈழத்தமிழரின் நலனில் அக்கறையுள்ளவர் போன்று நடித்துவருகிறார். இவர்களைப் போன்றே தமிழக காங்கிரஸாரும் ஈழத்தமிழர் விடயத்தில் மிகுந்த அக்கறையுள்ளவர்கள் போன்று நடித்து பொய்ப்பித்தலாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ப.சிதம்பரத்திற்கும், ஜெயந்தி நடராஜனுக்கும் மற்றும் தமிழக காங்கிரஸாருக்கும் தேர்தல் நெருங்குவதனால் இவர்களுக்கு தற்போது போலி ஞானம் ஏற்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=SJr-EG97bOI

இக்காணொளியைப் பாருங்கள் ப.சிதம்பரம் கூறுவதனைக் கேளுங்கள், அன்று இறுதியுத்தம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது சிங்கள அரசு யுத்தத்தில் வெற்றிபெற்றுவிட்டோம் (தமிழினத்தை அழித்துவிட்டோம்) என்ற நல்ல செய்தியைக் கேட்க காத்துக்கொண்டு இருக்கிறோம் என்று வட இந்திய ஊடகத்திற்கு கூறியவர்தான் இவர்.

மேலும் இக்காணொளியில் ப.சிதம்பரம் கூறுகிறார் ஈழத்தமிழர் விடயத்தில் விலை மதிக்க முடியாத மாணிக்கத்தை இழந்தோம் என்று ராஜீவ் காந்தியைப் பற்றி கூறுகிறார். நூற்றுக்கணக்கான விலை மதிக்க முடியாத பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடியவர் தான் ராஜீவ் காந்தி என்ற உண்மையை மறைக்க முடியுமா? அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான விலை மதிக்க முடியாத அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களை பலியெடுத்தவர் தான் ராஜீவ் காந்தி என்ற உண்மைகளை மறைக்கமுடியுமா? தமிழர்களின் உயிர்களை துச்சமாக கருதிவிடமுடியுமா? தங்களின் உயிரிலும் மேலாக விடுதலைப் போராட்டத்தை நேசித்தவர்கள் விடுதலைப்புலிகள், அவர்கள் தங்களை ராஜீவ் காந்தி காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையினால் ஆயுதங்களை ஒப்படைக்க விலை மதிக்க முடியாத மாணிக்கங்களாக தேசியத் தலைவராலும், மக்களாலும் கருதப்பட்ட நிராயுத பாணிகளாக இருந்த போராளிகளின் கொலைகளுக்கு காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவ்வாறு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகத்தை செய்திருந்தார் ராஜீவ் காந்தி.

தீலிபன், அன்னை பூபதி என்று அனைவரின் அஹிம்சைப் போராட்டத்தையும் துச்சமாக கருதினார் ராஜீவ் காந்தி. என்னமோ ராஜீவ் காந்தி ஈழத்தமிழர்களுக்கு நன்மைகள் பல கோடி செய்த ஒரு உத்தமரை இழந்துவிட்டோம் என்று கூறுகிறார் ப.சிதம்பரம். இவர்கள் கூறுவதனைப் பார்க்கும் போது சோனியா காந்தியை விட ராஜீவ் காந்தி தான் சிதம்பரம் போன்றவர்களுக்கும் தமிழக காங்கிரஸாருக்கும் அதிகமாக எழும்புத் துண்டுகளைப் போட்டு வந்திருக்கிறார் போலவும் அவரைப் போன்று சோனியா காந்தி எழும்புத் துண்டுகளை அதிகமாகப் போடவில்லை என்ற ஆதங்கத்தினால் தான் இவ்வாறு புலம்புகிறார்கள் போல?

ராஜீவ் காந்தியின் கொலையல்ல, அது கொலை என்று சொல்லக்கூடாது, அது மரண தண்டனை, நாட்டுப்பற்றுள்ள இந்தியன் யாராவது இருந்திருந்தால் அவனே ராஜீவ் காந்திக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ராஜீவ் காந்தியின் கொலையை ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்திருந்தால் அது குற்றம் என்று கொளத்தூர் மணி அவர்கள் அன்று முத்துகுமாரின் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் கூறியிருந்தார். இது மானமுள்ள, முதுகெலுப்புள்ள, ஆண்மையுள்ள மறத்தமிழனின் பேச்சாகும்.

ஈழத்தில் நடந்து முடிந்த யுத்ததினைப் பற்றி ஏன் மீண்டும் மீண்டும் பேசு வேண்டும்? தற்போது உள்ள ஈழத்தமிழ் மக்களின் நல்வாழ்விற்கு என்ன செய்யலாம் என்பதை மட்டும் பேசுங்கள் என்று கே.எஸ் அழகிரி முதல் தமிழக காகிரஸில் உள்ள அனைவரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதாவது சிங்களப் போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றி மீண்டும் அவர்கள் ஈழத்தில் மீதமுள்ள தமிழ் மக்களையும் இனவழிப்புச் செய்வதற்காக இவ்வாறு தமிழக காங்கிரஸார் கருத்துக்களைக் கூறிவருகிறார்கள். ஆனால் நடந்து முடிந்த ராஜீவ் காந்தியின் கொலையை மட்டும் இவர்கள் மறக்காமல் மீண்டும், மீண்டும் பேசி ஈழத்தில் காங்கிரஸ் அரசின் துணையுடன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பை நியாயப்படுத்தி வருகிறார்கள்.

ராஜீவ் காந்தியின் சுயரூபத்தை மறைத்தும், அவரினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையும் மறைத்தும், ராஜீவ் காந்தி என்ற விலை மதிக்க முடியாத மாணிக்கத்தை இழந்தோம், புலிகள் அவரைக் கொன்றுவிட்டார்கள் என்று கூறி தமிழகத்தில் வாக்குகளைப் பெறமுடியாத நிலமை தற்போது உருவாகியிருக்கிறது என்ற உண்மையை காங்கிரஸார் உணரவேண்டும். புலிகளையும் தமிழீழத்தையும் ஆதரித்து செயல்படுபவர்களை உள்ளே தூக்கிப்போடுகிற காலமும் முடிவடைந்துவிட்டது என்பதை காங்கிரஸார் நன்றாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் காங்கிரஸார் பெட்டியினுள் பற்கள் புடுங்கப்பட்ட பாம்புகளாக சுறுண்டு கிடைக்கிறார்கள், தமிழக காங்கிரஸாரும் புலிகளையும் தமிழீழத்தையும் ஆதரித்து செயல்பட்டால் தான் தமிழக அரசியலில் காலூன்றி நிற்கமுடியும் என்ற நிலமை உருவாகியிருக்கிறது.

தமிழக காங்கிரஸார் தமிழகத்தில் உள்ள மக்களிடம் அரசியல் பிழைப்பிற்காக ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சிங்கள அரசைக் கண்டிப்பது போன்று பல நாடகங்ளை அரங்கேற்றி வருகிறார்கள் ஆனால் இந்திய பாராளுமன்றத்திலும், மக்கள் அவையிலும் சிங்களப் பேரினவாதிகளின் செயல்பாடுகளை நியாயப்படுத்தி ஆதரித்து வருகிறார்கள். ஈழத்தமிழர் தொடர்பாக தமிழக காங்கிரஸார் கூறும் விடயங்களை மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசினால் ஒருபோதும் கூறப்படுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

உண்மையைக் கூறுவது என்றால் காங்கிரஸ் வரும் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது ஏனென்றால் தேர்தலில் போட்டியிடுவதற்காக செலுத்தப்படும் வைப்புத் தொகை இழக்காமல் இருப்பதற்காக.

விஸ்வா