Monday, May 27, 2013

கண்ணியத்தின் காவலனே நீ வாழி



கண்ணியத்தின் காவலனே நீ வாழி
கண்ணிமை நீ எனக்காணம் விழிகள்
போற்றிடும் தேவனே நீ வாழி
எங்கள் நிலம் எங்கள் வளம் எங்கள் தமிழ்க்குலம்
காக்க வந்த சாமி நீ

வங்கக் கடலும் வந்து வணங்கும் வல்வையிலே உதித்தவன் நீ
வீரம் மிக்க விளை நிலத்தின் தாயுமானவனும் நீ
தண்ணீருக்கும் தாகம் வந்தது இங்கு
தாய் நில நெய்தலுக்கும் காச்சல் வந்தது நொந்து
உப்பளத்து நிலம் தன்னை நீ செப்பனிட்டபோதும்
சிங்களத்து தீவு என்றே இன்னும் பொய்மைச்
சித்திரங்கள் முளைக்கிறது

எடுப்பார் கைப்பிள்ளையோ எம் தேசம்
உயிர் கொடுத்தேனும் பகை அறுத்தே குல வாழ்விற்கு தருவாய் தமிழீழம்
கொள்ளளவு ஈழத்திற்கு நாம் கொடுத்த விலையார் அறிவார்
கொள்ளுமிடம் கொள்ளாதளவில் முட்டுகின்ற
பகைமையை நீ அறிவாய்

நீதி சொல்ல வந்தவரோ பாதி முகம் காட்டி மூடிவிட்டார்
நிழல் யுத்தக் காலம் இதில் நீ இல்லை எனவும் சொல்லுகிறார்
நீதித் தராசை சமச்சீர் தூக்கும் தேவன் நீ
அறிந்தும் அறியாதவற்கும் அறிவொளிச் சுடரும் நீ
வாழிய வாழியவென வாழ்த்துகிறேன் உன்னை
காலத்தை வென்றவனே தமிழீழத்தையும் வெல்வாய் நீ.

கவிஞர்:வல்வை சுஜேன்