Monday, May 20, 2013

எமைவிட்டுப் போனதேன்?


மணலாற்றுக் களமதில் - பசீலனுடன்
பகைமேல் பாய்ந்த புலியே
கொக்குத்தொடுவாய் எமக்குக்
கொணர்ந்துதந்த கோவே
உன்குரலில் பகையினை 
குலைநடுங்க வைத்த
மட்டற்ற வீரனே பால்ராஜ் அண்ணா
உம் வீறுநடை வெற்றிபல தருமென
நாம் பார்த்திருக்க
விழிமூடிப் போனதேனோ!

ஓயாத அலையாய் - பகைமேல்
ஓங்கியடித்த ஓர்மத்தீயே
இத்தாவிலில் இறங்கி - பகைமேல்
இடிபோளிந்த ஈழவனே
பால்ராஜ் அண்ணா
அலைகளாகப் பகைமேல் பாய்வாய்
என நாம் பார்த்திருக்க - நீ
கண்ணீரில் எமை கலங்கவிட்டுப்
போனதேனோ!

எம் தலைவன் - உன்
திறன்கண்டு வளத்திட்ட
தீரமிகு தளபதியே - நீ
உருவாக்கிவிட்ட உறவுகள்
உன் கட்டளைக்காய்க் காத்திருந்தன
பால்ராஜ் அண்ணை - நீ
எமைக் கைவிட்டுச் சென்றதேனோ!

அச்சத்தின் எதிர்பொருளே
கட்டளையின் ராஜாவே
கரிகாலன் சொல்லின் செயல்வடிவே
உம் வீர நடைக்காக எம் வீழிகள்
ஏங்கியிருக்க - நீர்
எமைவிட்டுப் போனதேனோ!

உம் வீரமரணச் செய்தியில் - எம்
விழிகள் ஈரமண்ணா
கொடியவன் கொல்லமுடியா உனை - அக்
கொடிய நோய் எப்படிக் கொன்றது?
பால்ராஜ் அண்ணா
உமக்காக ஏங்கும் - உம்
உலகத் தமிழினத்திற்காக - ஒருமுறை
எழுந்து வாருங்கள் அண்ணா!

போராளி இ. நக்கீரன்