Wednesday, June 5, 2013

தியாகி பொன்.சிவகுமாரன் பதியப்படாத உண்மை!


அந்தநாளுக்கு முந்தையபொழுதில் அதைப்போன்றஒரு காட்சியை தமிழீழம் பார்த்து அறிந்து இருக்கவில்லை. மிகவும் உணர்ச்சிநிறைந்த ஒரு இறுதிநிகழ்வு அதற்குமுன்னர் நடந்ததில்லை.

தமிழீழவிடுதலைக்கான போராட்டம் மெதுமெதுவாக ஆயுதப்போராட்டத்தைநோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த ஆரம்பபொழுதில் சிவகுமாரன் என்ற ஆயுதபோராட்டவீரனுக்கு தமிழ்மக்கள் கொடுத்த திரளான இறுதிவழிஅனுப்புநிகழ்வானது அப்போது தமிழீழவிடுதலைக்கான ஆயுதபோராட் டுத்தில் நின்றுகொண்டிருந்தவர்களுக்கும் அதற்குப்பின்னர் போராட்டகளத்துக்கு வுந்தவர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலைக்கொடுத்தது.

பொன்.சிவகுமாரன் தான்வாழும்போதும் தமிழீழவிடுதலையை முன்னகர்த்த ஓயாது பாடுபட்டதுபோலவே தன் மரணத்தின்போதும் விடுதலைப்போராட்டத்துக்கு ஒருவிதமான மக்கள் அங்கீகாரத்தை பெற்றுத்தந்துவிட்டு போய்ச்சேர்ந்தவன்.

பொன்.சிவகுமாரனின் வாழ்வானது 1950ல் தொடங்கி 1974 யூன் மாதம் 5ம்திகதி தற்கொடையுடன் முடிவடைகின்றது என்பதற்கும் அப்பால், சிவகுமார் எறிந்ததும்,வைத்ததுமான சில வெடிகுண்டுகளின் வெடிப்புகளுக்கும் அப்பால்,சிவகுமாரால் குறிவைக்கப்பட்டும் தப்பிய தமிழினவிரோதிகளின் தலைவிதிக்கும் அப்பால் சிவகுமாரனின் வாழ்வு மிகவும் வீரியம்மிக்கதும் தியாக ம் நிறைந்ததும் ஆகும்.

பொன்.சிவகுமாரன் விடுதலைக்கான போராட்டத்தை நடாத் தினான் என்று சொல்வதைவிட விடுதலைக்கான போராட்;டத்துக்கான அமைப்பு ஒன்றை கட்டும்முயற்சியிலும் விடுதலைக்கான உண்மையான போராளிகளைதேடி அறியும்இடைவிடாத தேடலிலும் இறுதிவரை முயன்றவன்.

அவனுடைய இந்தத் தேடல் அவரை 1960களின் இறுதியில் நடைபெற்ற மாவிட்டபுரம் ஆலயப்பிரவேச போராட்டகளத்துக்கும் கொண்டுசென்றது.அங்குநின்றுகொண்டிருந்த சாதியப்பெரு மகன்களின் வெறிச்செயலால் மனம்கொதித்துப்போனவன் சிவகுமாரன்.

அந்தப் பொழுதில்தான் சிவகுமாரனுக்கு அவனுடைய உணர்வுகளைப்போன்ற ஒத்த உணர்வுகளுடன் அங்கு திரிந்துகொண்டிருந்த ‘பட்டு அண்ணா’வின் தொடர்பு கிடைக்கிறது.

அதற்கு முன்பே ஆயுதப்போராட்டக்குழு ஒன்றுடன் தொடர்பாக இருந்த பட்டுஅண்ணாவின் தொடர்பு பல கதவுகளை சிவகுமாரனுக்கு திறந்து வைக்கிறது. குண்டு செய்யவேண்டும்.

குண்டு தமிழினஎதிரிகளுக்கு எதிராக பயன் படுத்தவேண்டும் என்ற சிவகுமாரனின் கனவுகளுக்கு பட்டுஅண்ணா பாதை காட்டு கிறார்.வல்வெட்டித்துறையில் அந்தநேரம் இயங்கிவந்த ஆயுதப்போராட்ட அமைப் பான ‘தங்கத்துரை அண்ணா, பெரியசோதி அண்ணா’ குழுவினருடன் பொன். சிவகுமாரனுக்கு தொடர்புஏற்படுகின்றது.

அதற்கு முன்னரே குண்டுசெய்யும் முயற்சி களிலும்,ஆயுதம் பெற்றுக்கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்த தங்கத்துரை அண்ணா, பெரியசோதிஅண்ணா குழுவினரின் வெடிகுண்டு சம்பந்தமான பட்டறிவுகளும்,சிவகுமாரனின் குண்டுசெய்யும் முயற்சிசம்பந்தமான அறிவும் இணைந்தபோதினில் சிவகுமாரனின் முதலாவது குண்டுவைக்கும் முயற்சி 1971ம் ஆண்டு யூன்மாதம்19ம் திகதி அரங்கேறியது.

சிவகுமாரன் படித்த உரும்பராய் சைவப்பிரகாசவித்தியாசாலைக்கு வருகைதந்த சிங்களபிரதி அமைச்சர் சோமசிறீ சந்திரசிறீயின் வாகனத்தின் கீழ்வைக்கப்பட்ட இந்த முயற்சி வெற்றியீட்டாத போதிலும் ஆயுதஎதிர்வினை பரணாமம் கொள்வதை சிங்களத்துக்கு புரியவைத்த நிகழ்வாக இதுஇருந்தது.

அதன்பின்னர் பலபல முயற்சிகள்.வெற்றியளிக்காத முயற்சிகள். ஆனாலும் சிவகுமாரன் ஒருபோதும் தன்னுடைய இலக்கினில் சமரசம் செய்து கொண்டதோ, பின்வாங்கியதோ இருந்திருக்கவில்லை.

தமிழீழம் சம்பந்தமான எல்லா தளங்களிலும் தன்னுடைய ஒப்புயர்வான ஈடுபாட்டை வெளிக்காட்டியவன் அவன். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழராய்ச்சி மாநாட்டின்போது நடைபெற்ற ஊர்திகளின் பவனியின்போது அன்னபூரணிகப்பல் ஊர்திக்கு பின்னால் வந்து கொண்டிருந்த பண்டாரவன்னியன் ஊர்தியின் முகப்பில் எழுதப்படடிருந்த ‘உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு’ என்ற வாசகத்தை அகற்றும்படி சிங்கள காவல்துறை வற்புறுத்தியபோது சிவகுமாரன் அதனைஎதிர்த்து கொதிக்கும் வீதி யிலேயே மறியல் செய்தவன்.

அவனுடைய உறுதியான எதிர்ப்புடன் மற்ற இளைஞர்களும் இணைந்தபோது சிங்களம் பணிந்து பின்வாங்கியது.இப்படியாக எமது சமூகத்தின் அவலங்கள் அனைத்துடனும் மல்லுக்கட்டியவன் சிவகுமாரன். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடரும் சாதியஏற்றத்தாழ்வுக் கொடுமைக்குஎதிராக அவன் நிறையவே முயன்றவன்.

இன்று அவனின் நினைவுநாள் ஒரு ஊமைப்பொழுதில் வந்து இருக்கின்றது.அவன் போராடிகாலத்தைப்போன்ற ஒரு காலகட்டத்தில் அவனின் நினைவை ஏந்துகிறோம். எமது முழுஇனமும் ஒரு மௌனப்பொழுதுக்குள் முகம் புதைத்துநிற்கும் அவநம்பிக்கைப்பொழுது இது.

சிவகுமாரனின் நினைவு இந்த பொழுதை ஊடறுத்து நம்பிக்கையை விதைக்கட்டும்.பொன்.சிவகுமாரன் எந்த நம்பிக்கையுடன் விடுதலைக்காக அலைந்தானோ,அந்த நம்பிக்கையை எமக்குள் நாமே ஊட்டுவோம்.புன்னகைமாறாத அந்த போராளியின் முகமும் அவனின் தியாகமும் வரலாற்றின் மிகப்பெறுமதியான தடங்களாக என்றும் இருக்கும். 

ச.ச.முத்து