Friday, May 17, 2013

முகவரி அல்ல முகம் - பாகம் 4




முடக்கப்பட்ட
உன் முகாம்களில் கேட்டேன்….
துரத்தப்பட்ட
உன் சுவடுகளில் உணர்ந்தேன்…
எனக்கும் வேர்விட இடமில்லை என்பதை

என்சொல் பழகிய
செவிகள் கேட்கட்டும்
உன்னை மறுப்பது
என்னை மறுப்பது.

சிறகு விரித்து
விதையொன்று அலையும்
முளைக்க ஒருபிடி
மண்தேடி.

கவிஞர் இன்குலாப்

தமக்கு எழுந்த விடுதலை வேட்கையால் தமிழனுக் கென்று ஒரு நாடு அமைக்க இழப்புகளையும், துன்பத்தையும், இன்முகத்தோடு தாங்கி தமது இலட்சியத்தை வென்றெடுக்கும் பணியை இடையராது செய்து கொண்டிருந்த தமிழ் போராளிகள் முறியடிக்கப் பட்டதாக வடநாட்டு ஊடகங்கள் நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொல்லி தீர்த்தது. தமிழர்கள் வீழ்ந்தார்கள் என்பது வட இந்தியர்களுக்கு ஒர் இனிய செய்தி. சிங்களவன் அதை உணர்ந்ததால் தமது பரப்புரை தளமாக வடநாட்டு ஊடகங்களையேத் தேர்வு செய்தான்.

இத்தனை கேடுகளையும் செய்துவிட்டு சிங்கள இனவெறியன் ராஜபக்சே இந்த போர் இந்தியாவிற்காக நடத்தப்பட்டது என்று பகீரங்கமாக அறிவிக்கிறான். ராஜபக்சே இவ்வாறு கூறியதற்கு இதுவரை இந்திய அரசிடமிருந்து எவ்வித மறுப்போ, கருத்தோ வெளிபடவில்லை. சோனியா ஆட்சியை அமைத்ததும் தாம் தமிழரை வென்றதும் சமமான வெற்றியாகக் கருதும் ராஜபக்சே ஒரு சிறு போராளி குழுவை எதிர்கொள்ள சீனா, பாகிஸ்தான், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆற்றலை ஒட்டுமொத்தமாய் பயன்படுத்தியிருக்கிறான். இது ஒன்றே போதும் புலிகளின் வீரத்தை அடையாளப்படுத்த. நமது ஊர்களில் எணூணிதணீ கீணிதீஞீடிண்ட் என்று சொல்லக் கூடிய குழு போக்கிரிகள் கருவித்தரிக்காத ஒருவரை கூடி நின்று வெட்டி வீழ்த்துவார்களே அப்படி கையில் ஆயுதமில்லா அப்பாவி தமிழர்களை சிங்கள வெறியர்களின் கூலிப்படையாய் மாறி குதறித்தள்ளியது அந்த பன்னாட்டுப் படை. ஆனாலும், கூட அவர்களால் வெற்றியை எட்டமுடியவில்லை என்பது சிங்கள அரசின் செய்தியாளர்கள் தரும் கூற்றுகளில் இருந்து வெளிப்படுகிறது. இவர்கள் தமிழப் போராளிகளை முறியடிக்கப்போவதாக கூறிவிட்டு அப்பாவித் தமிழர்களை அநியாயமாய் பழி தீர்த்து தமது முகங்களிலே குருதியால் கோலம் வரைந்துள்ளார்கள். ஆனாலுங்கூட ஆட்டைக் கொன்ற ஒநாய் ரத்தக்கறையை மறைக்க அப்பாவியாய் நடிப்பது போல இவர்கள் செய்த அத்தனை அநியாயங்களையும் மறைக்க பயங்கரவாதத்திற்கு எதிரானபோர் என்று வசனம் பேசுகிறார்கள்.

அப்பாவி தமிழ்மக்கள் 50.000 பேரை ஒரே நாளில் கொன்றொழித்ததற்குப் பெயர் எவ்வளவு பெரிய பயங்கரவாதம். ஆனால் ‘புத்தநாடு செய்த பெருங்கொடுமையை ஆதரித்து காந்தி நாடு கையெழுத்து போடுகிறது’. இவர்களுக்கு ஆதரவாய் நின்ற நாடுகள் சீனா, திபெத் மக்களின் ஜனநாயக உரிமையை அவர்களின் தேசிய அடையாளத்தை தோட்டாக்களின் முனையில் துடைத்தெறிய துடிக்கும் நாடு. அதனால்தான் வேறெந்த தேசிய அரசும் தமது அடையாளத்தை வெளிக்கொணரகூடாது என்ற கயமையோடு செயல்படுகிறது. அதோடில்லாமல் மேற்காசிய நாடுகளில் தமது பேரரசை நிலவ பல புதிய வழிகளை தேடி வருவதால் இலங்கையின் கடல்வழிகள் அந்நாட்டிற்கு தேவைப்படுகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு எத்துனை பெரிய அச்சுறுத்தல் என்பது இந்தியா ஏன் உணரமறுக்கிறது என்பது புரியவில்லை.

ரஷ்யாவை பொறுத்தமட்டில் கட்டிக்காக்கப்பட்ட மாந்தகுல மேன்மைகள் முதலாளித்துவ வெறியால் முறியடிக்கப்பட்டதன் விளைவாக சுகபோக வாழ்வுக்கு ஆசைப்பட்ட சில பூஷ்வா சிந்தனையாளர்கள் தம்மை வளர்த்துக் கொள்ள, ஒப்பற்ற மாமனிதன் லெனின் கட்டியமைத்த சோவியத் ஒன்றியத்தை சிதறடித்தார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானை தமது கட்டுக்குள் கொண்டுவர அளவிட முடியாத போர்கருவிகளால் ஆப்கானிஸ்தானை நிரப்பினார்கள். ஆப்கானிய மக்களின் தேசிய அடையாளத்தையும் லெனின் கூறியதைப்போல அவர்கள் பிரிந்து போகும் உரிமையையும் மறுத்தவர்கள் தான் இந்த ரஷ்யர்கள். இப்படி இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகள் ஒவ்வொன்றும் தனிமனித உரிமைகளை மட்டுமல்ல தேசிய மொழி, சிந்தாந்தம், கலாச்சாரங்களை, கல்லறைக்கட்ட துடிக்கும் நாடுகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவர்கள் எல்லாம் ஒன்றிணைந்ததுதான் இலங்கையை இந்த ஒநாய் ஆடுகளைக் கொல்லாது என்று சாட்சியம் கூறியிருக்கிறார்கள்.

தமது பெயரிலேயே துட்டன் என்ற அடைமொழி கொண்ட இனவெறியன் எல்லாளனோடு போரிட்டு புறமுதுகிட்டு ஒடினான். வயது முதிர்த்த எல்லாளனை எப்படி கொல்வது என திட்டமிட்டு குறுக்கு வழியிலே துட்டகாமினி எல்லாளனை வெட்டிக் கொன்று தமிழரசைக் கைப்பற்றினான். சூழ்ச்சி செய்வதும், சதி செய்வதும், தமிழர்களுக்கு ஏனோ வராமலேயேப் போனது. தமிழர்கள், சிங்களர்கள் எதிர்ப்பு என்பது இந்த நிகழ்வின் மூலமே தொடங்கியது. தமிழர்களின் தலைநகராய் இருந்த அனுராதபுரத்தை பௌத்த சமயத்தினர் கைப்பற்றி தமது தலைநகராக மாற்றியமைத்தார்கள்.

கி.பி. 550- 800 களில் தமிழ்நாட்டில் ஆழ்வார்களும், நாயன்மார்களும், வைணவ, சைவ சமயங்களில் மறுமலர்ச்சி பெற மாபெரும் தொண்டாற்றினார்கள். வைணவ சமய கருத்துக்கள் வேகமாய் பரவத் தொடங்கியது. இக்காலங்களில் தான் தமிழர்கள் தம்மை தமிழர்களாக மீண்டும் பார்க்கத் தொடங்கினார்கள். இப்படி தமிழ்நாட்டில் பேரலையாய் புறப்பட்ட வைணவ, சைவ சமயங்களின் ஆற்றல் இலங்கையில் பேரிடியாய் வந்திறங்கியது. தமிழர்கள் பலர் மீண்டும் தமிழர்களாயினர். தமிழ்நாட்டில் பல்லவ, பாண்டிய மன்னர்கள் சைவ சமயத்திற்கு தம்மை மாற்றிக் கொண்டதால் இலங்கையில் உள்ள பௌத்தசமய தலைமைக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. எங்கே தமது சமயம் அழிந்து விடுமோ என்ற அச்சத்தால் கூடிப்பேசி திட்டமிட்டார்கள் பௌத்தத்தைக் காப்பாற்ற என்னவெல்லாம் செய்யமுடியும் என்று ஆலோசனை நடத்தினார்கள். அப்போதுதான் அவர்கள் மூளையில் மகாவமிசம் என்ற கற்பனைக் கதைத் தோன்றியது. இந்த கதையிலே தமிழர்க்கு எதிராகவும், சைவ சமயத்திற்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் புகுத்தப்பட்டன. குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக அரசு அமைய வேண்டும் என்பதே மகாவமிச கருத்தோட்டமாக அமைந்திருந்தது. விஜயனின் வழிவந்த அந்த இனத்தினர். தம்மை சிங்களவர் என அழைத்துக் கொண்டனர், அதோடில்லாமல் பௌத்தத்தைக் கட்டிக் காக்கும் பெரும் பொருப்பு தமக்குண்டு என கூறிக்கொண்டனர். வெறும் வட்டார வழக்காக வரிவடிவமற்ற இந்த சிங்கள மொழி சிங்களர்களின் மகாவமிசத்தின் மூலம் அங்கீகாரம் பெறத் தொடங்கியது. மகாவமிசத்தை படைத்தளித்த சிங்கள அரசன் தாதுசேனன் காலத்தில் இது நிகழ்ந்தேறியது.

இக்காலத்தில் தமிழ்நாட்டை நாயன்மார்கள் ஆட்சி புரிந்து வந்தனர். அந்த காலத்திலே பௌத்தர்களாய் இருந்தவர்கள், இல்லாவிட்டால் பௌத்த சமயத்திற்கு மாறியவர்கள் சிங்கள மொழியை பௌத்த மொழியாக உள்வாங்கிக் கொண்டனர். ஒன்றுபட்டு கிடந்த மக்கள் மொழியால், சமயத்தால் வேறுபட்டு நின்றவர்கள், அது சிறிதுசிறிதாய் வளர்ந்து தமிழர் நிலப்பகுதி, சிங்களர் நிலப்பகுதி என வேற்றுமை வேரூண்றத் தொடங்கியது. இந்த நிலப்பகுதிகள் எப்படி பிரிந்து கிடக்கிறது என்பதை புவியியல் ஆய்வு கண்ணோட்டத்தோடு பார்த்தோம் என்றால் தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்குமான உறவு எத்தனை நெருக்கமானது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டிற்கு அருகே உள்ள கரையோரங்களும், சமவெளிகளும், தமிழர்களின் நிலப்பகுதியாக இருக்கின்றன.

மலைப்பாங்கான நடுப்பகுதியும் தமிழ்நாட்டிற்கு எட்டாத தெற்கு நிலப்பகுதியும் சிங்களர் நிலப்பகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதை நாம் மிகச் சாதாரண புவியியல் தளத்திலிருந்து புரிந்து கொள்ள முடியும். கி.பி. 993-1070 காலங்களில் ராஜராஜ சோழன், மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோர் இலங்கையின் மீது படையெடுத்து முழுத்தீவையும் தமிழர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பொலநடுவையில் சோழரின் தலைநகரம் அமைக்கப்பட்டது. சிங்களர்கள் தெற்கு நோக்கி ஒட்டம் பிடிக்கத் தொடங்கினார்கள்.

தொடரும்…

கண்மணி

முகவரி அல்ல முகம் - பாகம் 3