Saturday, June 1, 2013

ஆதவன் வரவை எண்ணி



பிறப்புக்குள் பிறப்பை வைத்து
இறப்பில்லா ஈகை வளர்த்து
ஊருக்கொரு வாசம் இன்றி
உலகத் தமிழனுக்காய் உதித்தவனே
நீ வாழி

பரந்த உலகிற்கு விண்ணில் உதையவன்
வருந்தும் தமிழர்க்கு நீயே சூரியன்
உன் விழிகளிரண்டும் சிவக்கச் சிவக்க
கதிரொளி கண்டோம் கானகத்தில்
உன் வேள்வி உபாச விரத நோண்பில்
உலைக்களம் தணித்தோம்
தமிழீழத்தில்

புரட்சிக் கனலின் ஊற்று நீ
புதிய வார்ப்புகளின் சிறப்பி நீ
எழுச்சி மலையின் உயர்ச்சி நீ
தமிழீழ மலர்ச்சியின்
தேசியத் தந்தையும் நீ

நீ வாழும் காலமே எமது பொற்காலம்
நீ தந்த வாகைகளே தமிழரின்
முடி ஆட்சி காலம்
பிரபஞ்ச ஒளியே பிரபாகரா
போற்றுகிறேன் உன்னை
சுதந்திரச் சுடர் நீ நிரந்தர ஒளிகொடு
வாகைகள் சூடி வாழ்வான் தமிழன்
வையகத்தில் தன் நாடெனும் தமிழீழத்தில்.

கவிஞர்:வல்வை சுஜேன்