பிறப்புக்குள் பிறப்பை வைத்து
இறப்பில்லா ஈகை வளர்த்து
ஊருக்கொரு வாசம் இன்றி
உலகத் தமிழனுக்காய் உதித்தவனே
நீ வாழி
பரந்த உலகிற்கு விண்ணில் உதையவன்
வருந்தும் தமிழர்க்கு நீயே சூரியன்
உன் விழிகளிரண்டும் சிவக்கச் சிவக்க
கதிரொளி கண்டோம் கானகத்தில்
உன் வேள்வி உபாச விரத நோண்பில்
உலைக்களம் தணித்தோம்
தமிழீழத்தில்
புரட்சிக் கனலின் ஊற்று நீ
புதிய வார்ப்புகளின் சிறப்பி நீ
எழுச்சி மலையின் உயர்ச்சி நீ
தமிழீழ மலர்ச்சியின்
தேசியத் தந்தையும் நீ
நீ வாழும் காலமே எமது பொற்காலம்
நீ தந்த வாகைகளே தமிழரின்
முடி ஆட்சி காலம்
பிரபஞ்ச ஒளியே பிரபாகரா
போற்றுகிறேன் உன்னை
சுதந்திரச் சுடர் நீ நிரந்தர ஒளிகொடு
வாகைகள் சூடி வாழ்வான் தமிழன்
வையகத்தில் தன் நாடெனும் தமிழீழத்தில்.
கவிஞர்:வல்வை சுஜேன்