Tuesday, May 21, 2013

இன்றைய நாளை நாம் அரச பயங்கரவாத எதிர்ப்புத் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும்



ராஜீவ் காந்தியின் மரணமே தமிழ் மக்களின் விடுதலைப்போரை இரு தசாப்தங்களுக்கு காப்பாற்றியது என்று கூறினால் அது மிகையாகாது. 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் அவர் மீண்டும் பதவிக்கு வந்திருந்தால் 1992 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த வருடங்களிலோ முள்ளிவாய்க்கால் போன்ற இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கும். அன்று தமிழீழத் தேசியத் தலைவரின் தலையைக் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டவர் தான் ராஜீவ் காந்தி.

ஈழத்தில் நூற்றுக்கணக்கான விலை மதிக்க முடியாத தமிழீழப் பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடியவர் தான் ராஜீவ் காந்தி, அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான விலை மதிக்க முடியாத அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைப் பலியெடுத்தார். தங்களின் உயிரிலும் மேலாக விடுதலைப் போராட்டத்தை நேசித்தவர்கள் விடுதலைப்புலிகள், அவர்கள் தங்களை ராஜீவ் காந்தி காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையினால் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க விலை மதிக்க முடியாத மாணிக்கங்களாக தேசியத் தலைவராலும், மக்களாலும் நேசிக்கப்பட்டட நிராயுத பாணிகளாக இருந்த அந்தப் போராளிகளின் கொலைகளுக்கு காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. தமிழீழப் போராட்டத்தில் ஒற்றுமையுடன் போராடிய போராளிக் குழுக்களுக்குள் பிளவை ஏற்படுத்தி அவர்களுக்குள் மோதவிட்டு பல கொலைகள் இடம்பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவ்வாறு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகத்தை தமிழ் மக்களுக்குச் செய்திருந்தார் ராஜீவ் காந்தி. மேலும் தீலிபன், அன்னை பூபதி என்று அனைவரின் அஹிம்சைப் போராட்டத்தையும் துச்சமாகக் கருதினார் ராஜீவ் காந்தி.

இன்று ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை தீவிரவாத எதிர்ப்புத் தினமாக காங்கிரஸ் கோமாளிகள் கடைப்பிடிக்கிறார்களாம். முதலில் ஈழத்தில் அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட போர்க்குற்றவாளியே ராஜீவ் காந்தி. உண்மையான பயங்கரவாதியும் அவரே. இப்போதெல்லாம் இனப்படுகொலையிலும், அரச பயங்கரவாதத்திலும் ஈடுபடும் குற்றவாளிகள் பெரிய தலைவர்களாகக் கருதப்படுகிறார்கள். அமெரிக்க எதிர்ப்புக் கொண்ட சில போர்க்குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படுகிறார்கள்.

சென்றவருடம் லைபீரியா நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தவர் சார்லஸ் டெய்லர் இவர் போர்க் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது, அதனைப் போன்று ஆர்மேனிய இனப்படுகொலை நிகழ்த்தியவருக்கும் இன்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட மிகமோசமான ஈவிரக்கமற்ற குற்றவாளி தான் ராஜீவ் காந்தி. இவர் மேற்கொண்ட குற்றங்களை விசாரணை மேற்கொண்டால் அவரின் கொடூரக் குற்றங்கள் உலகின் பார்வைக்கு அறியவரும்.

ராஜீவ் காந்தி எப்படி தமிழனுக்கு தலைவன் ஆகமுடியும்? தமிழினத்தை அழித்தும், தமிழீழப் பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடியவரை உண்மையில் நல்ல தமிழ் தாயின் மடியில் பிறந்தவன் தலைவன் என்று கூறமாட்டான். T20 உலகக்கிண்ணப் இறுதிப்போட்டியில் சிறிலங்கா தோல்வியடைந்து விட்டதனால் மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சார்ந்த தமிழ் இளைஞன் மனமுடைந்து தூக்குப் போட்டு இறந்தார். இவ்வாறு சில புத்திபிசங்கிய இந்திய தமிழர்கள் நமது இனத்தை அழித்தவர்கள் இவர்கள் என்று உணராமல் அவர்களை ஆதரிக்கிறார்கள். சோனியாவின் எச்சில் எழும்புத் துண்டிற்காக தமிழினத் துரோகிகளாக மாறி காங்கிரஸை ஆதரிக்கும் கொடியவர்களும் உள்ளனர்.

ராஜீவ் காந்தியின் சுயரூபத்தை மறைத்தும், அவரினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையும் மறைத்தும், அவரின் கொலையினைக் கூறி தமிழகத்தில் அரசியல் பிழைப்பு நடத்த முடியாத நிலமையுள்ளதை தமிழக காங்கிரஸார் உணரவேண்டும். ராஜீவ் காந்தியின் அரக்க ஆன்மா சாந்தியடைவதற்கு பல லட்சம் உயிர்களைப் பலியெடுத்தார் சோனியா காந்தி. அவர் இன்னமும் அடங்காமல் உயிர்களைப் பலியெடுக்க நிற்கிறார். பெண் இனத்திற்கே இழுக்கை ஏற்படுத்தியவர் சோனியா காந்தி.

இன்று இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும், இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் கூறியுள்ளார். இலங்கையில் ஈழத் தமிழர்களோ, அல்லது புலிகளோ தோற்கவில்லை தோற்றது இந்தியாவின் இராஜதந்திரம்தான் என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக பழ.நெடுமாறன் அவர்கள் கூறிய வாக்கு இன்று நிஜமாகிவிட்டது. இதனை தற்போது இந்தியாவே ஒப்புக்கொண்டு விட்டது. இன்று இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தாங்கள் தோல்வியைக் கண்டுள்ளோம் என்று கூறும் இந்தியா இதற்கு காரணமானவர் ராஜீவ் காந்தி என்ற உண்மையை உணர்வார்களா? அன்றே தமிழீழத் தேசியத் தலைவர் இவை நடைபெறக் கூடாது என்பதற்காக இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே மோதலை ஏற்படுத்த வேண்டாம் அதனால் நன்மை அடையப் போவது சிங்களப் பேரினவாதமே என்று ராஜீவ் காந்தியிடம் கூறினார் ஆனால் ராஜீவ் காந்தி அவற்றைத் தட்டிக்கழித்து விட்டு போரை நடத்தி மக்களைக் கொன்று குவித்தார். அதன்பின்னரும் ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தியடையச் செய்வதற்காக முள்ளிவாய்க்காலில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார்கள் காங்கிரஸார். இன்று பழ.நெடுமாறன் அவர்கள் கூறிய நிலைக்கு வந்துவிட்டார்கள் இந்திய ஆளும்வர்க்கத்தினர். ஆனால் இவர்களின் கொலை வெறியாட்டங்களால் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் திருப்பி வந்துவிடுமா? வெகுவிரைவில் புலிகளை அழித்தமையினால் இன்று இலங்கையின் ஊடாக இந்தியாவிற்கு எதிரான சக்திகளின் ஆபத்தில் நாங்கள் சிக்கியுள்ளோம் என்று இந்திய அரசே ஒப்புக்கொள்ளும் நிலமை ஏற்படும். உண்மையில் அவ்வாறான நிலமையில் தான் இந்தியா இன்று இருக்கிறது ஆனால் அதனை வெளியே சொல்வதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

ராஜீவ் காந்தியின் செயல்பாடுகளே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வியைக் கண்டுள்ளது என்ற விடயம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் அழிவிற்கு காரணமாகிவிட்டார் கண்டிப்பாக உலகத்தமிழினம் இன்றைய நாளை அரச பயங்கரவாத எதிர்ப்புத் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

விஸ்வா