Thursday, May 30, 2013

குற்றம் செய்யும் கொற்றவனே


குற்றம் செய்யும் கொற்றவனே
மற்றவர் மேல் வீண்பழி சுமத்தி
தமிழனைஅடிக்க தடி கேட்டாய் நீ
தடியும் தந்து கிபீரும் தந்த உலகு
உனக்கே கிலியும் தரும் என்று
நீ நினைக்கலையே அன்று

சிறுபாண்மை என எமை இழிந்து
சிறையிட்டு சிதையிட்டு சிரித்து
இன அழிப்பு கொழுப்பு மிகையில்
பேரினம் என்ற மமதை உனக்கும்
நீ எமக்கிளைத்த தீங்குதானே பயங்கரவாதம்
வெட்ட வெட்ட கிளம்புது பார் ஆதார பூதம்

உரிமை ஜோதிக்கு குருதி வார்த்து
உயிரை திரியாய் ஏத்தினோம்
உலகெலாம் ஓடி ஓடி பயங்கரவாதம் என
பச்சை குத்தினாய் எம்மேல்

வெள்ளை கதர் மேனியனே
துண்டுச் சிகப்பு மாலையனே
அச்சம் கொள்கிறாய் இன்று
ஆணவத் தேர் நிறுத்தி
நீ நடந்த தடங்களின் கீழ்
தமிழனின் பிணக்குன்றும் குளியும் என்று
உன் பாதம் அறியும்போது உலகறியாதோ

தேசியம் என்பது எல்லோருக்கும் பொது
தேய்ந்தாலும் பிறைபோல் பூரணமாகும் அது
நீதிக்கான போர் எமதென கண்டுகொண்டது உலகு
பொய்யுரைத்த உன்னை மெய்யுரைக்க அழைக்க
அஞ்ஞானத்தில் அறிவை ஒளித்து
அனைத்துலகுமே புலி என்கிறாய் நீ

எலி அல்லவா நீ
உலகம் உன்னிடம் தந்த தடி
உன்னை அடிக்கத்தான் என்பதை இன்றறிந்தாய்
சுயநிர்ணயம் சுதந்திரத்தின் அழகு
மகிந்த சிந்தனை மகாவம்சத்தின் மரண விரிப்பு

கவிஞர் - வல்வை சுஜேன்