நடந்திட அதிரிடும் நானிலமும் - இவர்
தடந்தோ ளெழும் உயர் தமிழ்உரமும் - அது
படர்ந்தே விரிந்திட தமிழ் நிலமும் - இவ
ரிடமே இருந்தன வாழ்வறமும்
உறுதி மனம்கொண்ட உணர்வெனும் தீ - இவர்
குறுந்தீ யலபெரும் எரிமலை தீ - மையும்
அறு தீர் வெடு என ஆற்றுஞ்செயல்- அதில்
பெறுந்தாய் ஈழமும் பெரிது நலம்
வெள்ளமும் பொங்கிட ஆறோடும் - அது
கொள்விரி கடலென புகழ் பரவும் -நல்
லுள்ளமும் பெரிதெனும் ஆகாயம் அதில்
எள்ளென வும் இலை பயம்சிறிதும்
கண்களும் எதிர்வரும் காலமெண்ணும் - அதில்
எண்களை வகுத்திடும் இளமனதும் - ஒரு
வெண்கல்லின் பளிங்கெனும் விதமுறுவல் - அதில்
மண்கொள்ளும் மகிமையின் திறன் உதிக்கும்
எங்கும் சுதந்திர இசைமுழக்கம் - இவர்
செங்களம் புகின் பகை சிதறி விழும் -மனம்
பொங்கி மகிழ்வொடு உயிரெடுப்போன்- பகை
சிங்கம் மெதிர்த்தவர் திறன் போற்றும்
நாடகமில் இது நடைமுறையாம் இவர்
ஆடலில் சிவனிலை ஆயினும்காண் -பெரு
தேடலில் இவர்கொண்ட விஸ்வரூபம் ப;ல
கூடலில் தேசங்கள் குமுற வைத்தே
படைமூன் றுடன் எழப் படபடக்கும் - உடல்
கிட ஈ தழிவென பகை வன் மனம் - இனி
விடமே வழியென கரமெடுக்கும் - இதை]’
விட நேர் மையதை மனம் மறுக்கும்
கடந்தன நீதியும் நேர்மைகளும் - துயில்
கிடந்தன தெய்வமும் திருவருளும் கொல்ல
படமெடுத்தாடின பாம்புகளும் - இனி
இடர் போய் கதிர்கிழக் கெழ விடியும்!
கிரிகாசன்