தமிழீழ விடுதலைப் போராட்ட சண்டைக் களங்களில் பால்ராஜ் என்ற மந்திரச் சொல் சிங்களத்தின் சேனைகளை கலங்கடித்து நின்ற வேளை வானலைகளில் எம் காதுக்குள் வந்த செய்தி பொய்க்காதா என ஏங்க வைத்த பிரிகேடியர் பால்ராஜ் (கந்தையா பாலசேகரன்) அவர்களின் மறைவு உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை உலுக்கி பெருந்துயரில் ஆழ்த்தியது.
தமிழீழத்தின் இதயபூமி எனப்படும் கொக்குத் தொடுவாயை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1983 போராட்டத்தில் உள்வாங்கப்பட்டு இந்தியாவிலே 9வது பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக் கொண்டு வன்னி திரும்பியவர்
13.02.1985, அன்று கொக்கிளாயில் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதலாவது சிறிலங்கா இராணுவத்தின் முகாம் மீதான தாக்குதலின் மூலம் தமிழீழ போரியல் வரலாற்றில் காலடி எடுத்து வைத்த பால்ராஜ். அதனைத் தொடர்ந்து மணலாற்றில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தும் பாரிய முயற்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். அதிலும் குறிப்பாக முந்திரிகைக் குளம், கொக்கைச்சான் குளம், ஆகிய இடங்களில் ஏற்படவிருந்த சிங்களக் குடியேற்றங்களையும், படை நகர்வுகளையும் தடுத்து நிறுத்தி தனது போரியல் யுத்தியினை வெளிப்படுத்தினார்.
தேசியத்தலைவர் அவர்கள் மணலாற்றில் இருந்த காலத்தில் அவரையும் போராளிகளையும் பாதுகாக்கும் நோக்குடன் வன்னியில் உள்ளகப் பாதுகாப்புப் பிரிவினை நிறுவி மேஜர்.பசீலன், லெப்.கேணல்.நவம், லெப்.கேணல்.கிறேஸி, கரும்புலி லெப்.கேணல்.போர்க், ஆகியோருடன் இணைந்து மிகத்திறமையாகச் செயற்பட்டு வன்னியி;ல் இந்திய இராணுவத்தின் அத்தனை வியூகங்களையும் முறியடித்து தனது திறமையை நிலைநாட்டி தேசியத்தலைவரின் நம்பிக்கையையும் றெ;றதோடு இந்திய இராணுவத்தையும் வியப்பில் ஆழ்த்தியவர் பால்ராஜ்.
இந்திய இராணுவம் வெளியேறிய போது வன்னிக்கான ஒருங்கிணைப்புத் கட்டளைத் தளபதியாக பதவி ஏற்றப்பட்டு வன்னியில் தடைக்கற்களாக இருந்த கொக்காவில், மாங்குளம், கிளிநொச்சி, முகாம்களைத் தகர்ததோடல்லாமல் முல்லைத்தீவுத் தளத்தை விரிவாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட கடற்காற்று போன்ற இராணுவ நடவெடிக்கையை தடுத்த சமருக்குத் தலமை வகித்தவர். மாங்குளம் முகாமிலேயே முதன்முதலில் 50 கலிபர் இயந்திரத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1991 ஜூலை யில் இடம்பெற்ற ஆகாயக் கடல்வெளிச்சமரில் (பலவேகய 01) இலங்கையில் இரண்டு இராணுவம் இருக்கின்றது. என சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டியதில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன் இணைந்து முக்கிய பங்காற்றியவர். தென்முனையினூடாக ஊடுருவி சிறப்பான தாக்குதலை ஒருங்கிணைத்து நடாத்தி மரபுவழிப் படையணியாக மாற்றுவதில் பெரும்பங்கெடுத்தவர். இதன்மூலம் இவர் உலக இராணுவ விற்பணர்கள் வியக்கத்தக்க வகையில் புதிய புதிய யுத்திகளை அறிமுகப்படுத்தி தனது போரியல் திறமையை மரபுவழியாக மாற்றுவதில் வெற்றிகண்டார். புலிகள் இயக்கத்தில் புதிய யுத்த தந்திரோபாயங்களை அறிமுகப்படுத்தினார்.
இதன் வெளிப்பாடாக உருவான தேசியத்தலைவரின் கனவுக்கு செயல் வடிவம் கொடுத்து 1991இல். முதலாவது சிறப்புப் படையணியான சாள்ஸ் அன்ரனிப் படையணியை உருவாக்கி அதன் முதலாவது சிறப்புத்தளபதியாக 1993 வரை செயற்பட்டார். 1991 களில் வவுனியா மாவட்டத்தில் நடந்த “வன்னிவிக்கிரம” படை நடவெடிக்கையை முறியடித்து தமிழீழப் போராட்டத்தில் முதன்முதலான மரபுவழி நேரடித்தாக்குதலை நடாத்தி உலங்குவான ஊர்தி ஒன்றையும் சுட்டு வீழ்த்தி தான் ஒரு தலைசிறந்த போரியல் ஆசான் என நிலை நிறுத்தினார். குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் நடாத்திய அனைத்துப் போரியல் வியூகங்களுக்கும் அடித்தளமிட்டவர் இவரே. 1995 – 1997 வரை மீண்டும் சாள்ஸ் அன்ரனியின் சிறப்புத் தளபதியாக விளங்கி அதனை பல உத்திகளும் உடைய சிறந்த படையணியாக கட்டியெழுப்பினார்.
அதன்பின் மணலாறில் நடத்தப்பட்ட “மின்னல்” படை நடவெடிக்கையை சிறப்பாக முறியடித்தார். அத்துடன் 1993இல் கிளாலியில் இடம் பெற்ற யாழ்தேவி நடவெடிக்கையில் தலமையேற்றிருந்த லெப்.கேணல்.நரேஸ் அவர்கள் வீரச்சாவடைய உடனடியாக அங்கு சென்று ஒருங்கிணைப்புக் கட்டளைத் தளபத்pயாகச் தலமையேற்று அக்களம் தமக்குச் சார்பாக இல்லாதிருந்த போதும் குறுகிய நேரத்தில் எதிரிகளை முறியடித்து எதிரிக்கு பல இழப்புக்களை ஏற்படுத்தி சர்வதேச பேரியல் நிபுணர்களை அதிரவைத்தார். அச்சண்டையில் காலில் ஊனமுற்ற நிலையிலும் தொடந்து நடைப்பயணங்களை மேற்கொண்டு பல நூறு தால்குதல்களை நெறிப்படுத்தினார். அத்துடன் பல ஆயிரம் ஆயிரம் புலிகளையும் உருவாக்கி அவர்களுக்கு போரியல் கலை தொடர்பாக பல பயிற்ச்சிகளையும் வழங்கினார்.
இந்த இடத்தில் பிரபல இராணுவ ஆய்வாளர் மாமனிதர் டி.சிவராம் அவர்கள் 2003 இல் வீரகேசரிக்கு எழுதிய ஆய்வுக்கட்டுரையில் அமெரிக்க இராணுவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் பிரிகேடியர் பால்ராஜ். அவர்கள் தலமையேற்று நடாத்திய யாழ்தேவி நடவெடிக்கை, குடாரப்பு தரையிறக்கம், தீச்சுவாலை, ஆகிய சண்டைகளின் வழிநடத்தல்கள் ஆகியவை ஆய்வுகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உலகில் குறுகிய நேரத்தில் படைநடவெடிக்கை ஒன்றை முறியத்த போரியல் வீரர்களில் பால்ராஜ் அவர்களும் ஒருவர் என அவ்ஆய்வுக்கட்டுரை தெரிவித்ததாக சிவராம் அவர்கள் எழுதி அன்றைய தினமே பால்ராஜூக்கு புகழாரம் சூட்டினார்.
அதன்பின் இடம் பெற்ற முன்னேறிப்பாய்தல் நடவெடிக்கையையும் தலமையேற்று முறியடித்து தலைவர் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். பின்னர் முல்லைத்தீவு தளம் தாக்கியழித்த நிகழ்வில் ஒருங்கிணைப்புத் தளபதியாகவும். பின் இடம்பெற்ற சத்ஜெய நடவெடிக்கையில் நேரடியாக களத்தில் வழிநடத்தினார். பின்னர் தாண்டிக்குளம், பெரியமடு, ஆகிய இடங்களில் இடம்பெற்ற செய் அல்லது செத்துமடி என்னும் ஊடறுப்புத் தாக்குதல் இவரது போரியல் திறமைக்குக் கட்டிளம் கூறி நிற்கின்றன.
பொதுவாக தமிழ|Pழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த ஊடறுப்புத் தாக்குதல் அனைத்தையும் தலமையேற்று சிறப்பாக வழிநடத்தியவர். சிங்கள தேசம் எந்த ஊடறுப்புத் தாக்குதல் நடந்தாலும் அது பால்ராஜின் தலைமையில் நடந்தது அல்லது பால்ராஜ் அந்த இடத்தில் நிற்கின்றது என்று கூறம் அளவுக்கு அவரது போரியல் வல்லமை பாராட்டத்தக்கது. இலங்கையிலேயே தலைசிறந்த பேரியல் வல்லுணன் பால்ராஜ் என்றால் அது மிகையாகாது. தேசியத்தலைவரின் நன்மதிப்பையும் பராட்டையும் பெற்றிருந்தவர் இவர்.
அதன்பின் நடந்த ஜயசிக்குறூய் இராணுவ நடவெடிக்கைகளின் ஒட்டுமொத்த கட்டளைத் தளபதியாகவும் விளங்கினார். பின்னர் ஓயாதஅலைகள் :03 இடம்பெற்றபோது அதில் பெரும்பங்காற்றியதோடு மட்டுமல்ல ஆனையிறவுத்தளம் மீட்புக்காக விடுதலைப்புலிகள் ஒரு தரையிறக்க மூலம் தமக்குச் சாதகமில்லாத எந்தப்பகுதியிலும் தாக்குதல் நடாத்தி வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் குடாரப்பு தரையிறக்கமும், இத்தாவில் ஊடறுப்புச் சமரும் நடாத்தி அங்கு 34 நாட்கள் அங்கு எதுவித வழங்கல்களும் இல்லாமல் எதிரியின் தளங்களுக்குள்ளேயே நின்று புலிகள் ஆனையிறவை மீட்டு பளை வழியாக இத்தாவிலில் வந்து கைகுலுக்கும் வரை நின்று புலிகளின் போரியல் வியூகத்தை சர்வதேசம் வியக்கும் வகையில் நிகழ்த்தி ஆணையிறவு வெற்றியின் முதுகெலும்பாகத் திகழ்ந்தார். பால்ராஜ் தீச்சுவாலையின் ஒருங்கிணைப்புத் தளபத்pயாகவும் இவர் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறக்கும் வரை போர் அரங்கில் கட்டளைத்தளபத்pயாக விளங்கியவர்.
சில களங்களில் புலிகளுக்கு தோல்வி என்ற நிலை வரும் போதும் சண்டைக்களத்தில் திடீரெனப் பிரவேசித்து புதிய வியூகங்களை அமைத்து சண்டையை வெற்றிப் பாதையில் திருப்பிய சமர்க்களங்களின் சரித்திர நாயகர் பால்ராஜ். உதாதரணமாக பூநகரி, யாழ்தேவி, ஆகாயக்கடல் வெளிச்சமர் ஆகியவற்றைச் சொல்லலாம்.
இவர் முதுபெரும் போரியல் ஆசான் மட்டுமல்ல ஒரு தலைசிறந்த மனிதனும் கூட போராளிகளுடன் அன்பாக பழகும் சுபாவம் மூலம் அனைத்துப் போராளிகளையும் அன்பால் கட்டிப் போட்டவர். அவர் களமுனையில் நிற்பது அறிந்தால் போராளிகள் உறுதியுடனும் உத்வேகத்துடனும் போராடுவார்கள். அடேல் பாலசிங்கம் அவர்கள் கூட பால்ராஜ் அவர்களை தனது சுதந்திர வேட்கை நூலில் பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட முதுபெரும் போரியல் ஆசானை நாம் இழந்திருப்பது மாபெரும் துயரமே இதனால் சிங்கள தேசம் மிகவும் மகிழ்ந்திந்தது. இப்படிப்பட்ட சரித்திர நாயகனுக்கு தலைதாழ்ந்த வீரவணக்கத்தை தெரிவிப்போம்.