பிரபாகரன்
என்னும் உன் பெயர்தான்
இந்த நூற்றாண்டின்
ஆண்மையின் அடையாளம்.
கால்நூற்றாண்டு நிர்வாகம் – உன்
கைகளில் இருந்திருந்தால்
இரண்டு மூன்று ஜப்பானை
ஈழம் கண்டிருக்கும்.
உன் தமிழீழ தாகத்தை
உலகம் உணர்ந்திருந்தால்
அங்கே,
தமிழச்சிகள்
கற்போடு வாழ்ந்து சாகும்
கனவுப் பலித்திருக்கும்.
விதியின் நேர்கோடேனும்
விலகாது இருந்திருந்தால்
ஈழத்தின் உற்பத்தியை
இவ்வுலகம் புசித்திருக்கும்.
தன்மானத்தின் கம்பீரமே!
இன்று,
வந்துவிடாதெ
மாவீரர் உரையாற்ற
நாளை,
வந்துவிடு
காடையர்க்கு பாலுற்ற.
கவிஞர் - நான் சித்தன்