Friday, May 31, 2013

மறக்க முடியுமா?



மறக்கத்தான் முடியுமா
மரணத்தின் வாசல் தொட்டவரை
வீர மைந்தர் தனை
மறக்கத்தான் முடியுமா?

தமிழ் ஈழமே எமது தாகம் என்று
புதுயுகம் படைக்கவென
புயலாகி களம் வந்தவரை
மறக்கத்தான் முடியுமா?

மரணமே வாழ்வாய்க் கொண்டு
மண்டியிட்ட மாற்றானை
விரட்டிய வேகம் தனை
மறக்கத்தான் முடியுமா?

தன்மானத் தலைவரின் அடியொற்றி
தடைகள் பல தாண்டியே - எதிரி
தடை உடைத்த வீரம் தனை
மறக்கத்தான் முடியுமா?

தமிழனைக் கதறவைத்த
சிங்களனைச் சிதற வைத்து
களமாடிய வேங்கைகளை
மறக்கத்தான் முடியுமா?

நாங்கள் வாழ
தங்களையே தானம் தந்தவரை
மறக்கத்தான் முடியுமா?

தியாகத்தின் திருவுருவாய்
தன்மானத்தின் தனிதிருவாய்
தயங்காது எதிரியோடு களமாடிய
கலங்கரை விளக்குகளை
மறக்கத்தான் முடியுமா?

தன்னிகரில்லாத் தலைவன் தந்த
தானை மறவர்களை எக்காலத்திலும்
மறக்கத்தான் முடியுமா?

புலி எட்டு திக்கும்
வெற்றி முரசு கொட்டி
வாகை சூடி வாழ்ந்த கதை
மறக்கத்தான் முடியுமா?

கவிஞர்:கல்கி.அருணா