மாவீரர்களை புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்களின் உணர்வுகளை எளிதில் வெளிக்கொண்டுவர முடிவதில்லை. அவர்களுக்குள் – அவர்களின் அடிமனதினுள் மறைந்துகிடக்கும் அந்த தாகம் என்ன? அதை ஏன் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. அது ஒரு மெல்லிய உணர்வாக இருந்தாலும் மிக ஆழமான – மிகவும் சூசகமான மென் இணைப்பாக இருக்குமோ….
தமிழீழத் தாயகமே அவர்களின் தாகமா… இல்லையில்லை… அந்த உணர்வுக்கும் மேலான ஓர் உணர்வு… என்ன அது? தமிழர்களின் சுதந்திரம் சுய உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பதும் அதற்குள் உள்ளடக்கமாக இருக்கலாம். ஆனால்… அதற்கும் மேலே ஓர் உண்மை உணர்வு… குறிப்பாகச் சுட்டிக்காட்ட முடியவில்லை என்ற ஆதங்கம்.
45 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் ஊறிப்போன என்னால் என்னுடைய எழுத்துகளுக்குள் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களுக்குள் மறைந்துகிடக்கின்ற மாபெரும் உளக்கிடக்கையை வெளிப்படுத்த பல தடவை முயன்றிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் மனதிற்குள் ஒரு நெருடலையே ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளனிடம் ஆயிரமாயிரம் எண்ணக் கருலங்கள் ஏற்படுவதுண்டு. மெல்லிய உணர்வுகளைக்கூட அவர்களினால் துல்லியமாக அடையாளம் காணமுடியும். விண்ணும் மண்ணும் புரியும் அதிசயங்கள் கூட எழுத்தாளனிடம் மண்டியிடுகின்றன. இயற்கை அன்னையின் வியப்பான விழுமியங்களைக்கூட மிக எளிதாக அவன் இனம்கண்டுவிடுவான். ஆனால் மாவீரர்களின் அந்தத் விய்மையான இதயத்துடிப்பை கண்டுபிடிக்க முடியவில்லை. எதிரியின் குண்டுத்தாக்குதலில் காயமடைந்தவன் ஓடித்தப்ப முயற்சிக்கிறான். முடியவில்லை. அவனுடன் ஓடிக்கொண்டிருந்த நண்பனை அழைக்கிறான். ‘நண்பா! என்னால் ஓடமுடியவில்லை. ஆனால் உயிருடன் எதிரியிடம் பிடிபட நான் விரும்பவில்லை. ஆதனால் என்னை உன் துப்பாக்கியினால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிக்கொள். ஆனால் மறக்காமல் என்னிடமுள்ள ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு செல். எம் இனத்தைப் பாதுகாக்க அது உதவும் என்று கூறினான்.
நண்பன் அதிர்ச்சியடைந்தான். தன் கையால் அந்த வீரனைக்கொல்வதா, ஆயினும் அவன் மீண்டும் மீண்டும் அபாய ஒலி எழுப்பியதனால் அவன் விரும்பியபடியே செய்கிறான். ஒரு மாவீரனின் வேண்டுதலைப் பார்த்தீர்களா? அடிமனதிலிருந்து அவனிடம் எழுந்த அந்த உணர்வு… ‘எம் இனத்தைப் பாதுகாக்க அது ஆயுதம், உதவும்!’ என்று கூறினானே… அதில் பொதிந்துள்ள உள்ளார்த்தம் என்ன? சயனைட் எனப்படும் இரசாயன உயிர்க்கொல்லி புலி வீரர்களின் கழுத்தில் சிறிய குப்பிகளாக அணியப்படாத காலம் அது. புதிதாக சயனைட் குப்பியை கழுத்தில் தொங்கவிட்ட ஒரு வீரனைச் சந்தித்து அதைப்பற்றி வினவினேன். ஆனால் அந்த வீரன் ஒரு புன்னகையைத் தவிர வேறு எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.
மிகச் சில நிமிடங்களுக்குள் உடலை வருத்தி உயிரைப் பறித்துக்கொள்ளும் இந்தச் சயனைட்டின் கொடுமையை உன்னால் உணர முடியுமா? என்று மற்றொரு கேள்வியை கேட்டபொழுது புன்னகையே பதிலாக வந்தது. ஆனால் ‘நீங்கள் கேட்ட கேள்விக்குரிய பதில் உங்களுக்குள்ளும் இருக்கிறது…’ என்று கூறிவிட்டுச் சென்றான். எனக்குள் என்று அந்த வீரன் குறிப்பிட்ட விடயம் உலகிலுள்ள எல்லாத் தமிழர்களிடமும் உண்டு என்று அர்த்தம் கொள்ளலாமா? நம் புலி வீரர்கள் பத்துக்கோடி உலகத்தமிழர்களின் உயிர்மூச்சோடு என்பதை மறக்கமுடியுமா?
மாவீரர்களின் தமிழுணர்வு மிக்க தியாகத்தை குறியீட்டாக எழுத்தாளர்களினால் குறிப்பிடமுடியவில்லை. அல்லது அவர்களை முழுமையாக எழுத்தாளர்களின் படைப்புக்குள் கொண்டுவரமுடியவில்லை. இதோ வருகின்றோம் என சாவுக்கே சாவுமணி அடிக்கும் வல்லமை கொண்டவர்கள். இளமைத் துறவிகள். காவி உடை தரிக்காமலேயே துறவறம் பூண்டவர்கள்.
தமிழர்கள்… தமிழீழம் என்ற மந்திரத்தை தம் உணர்வோடு கலந்துவிட்டவர்கள். அவர்களின் அதி உயர்வான வேள்வியைக்கண்டு உலகமே அஞ்சியது. அண்டசராசரங்கள், கோடானுகோடி தேவர்கள் ஆகியோருக்கு செய்யும் யாகத்தைப் பற்றியெல்லாம் கதைகளில் படித்துள்ளோம். ஆனால் மாவீரர்களின் யாகம் தமிழர்களின் இதயங்களில் இடம்பெற்றுக்கொண்டுருக்கின்றது. இதயங்களில் வைத்து யாகம் செய்யும் பாக்கியசாலிகள் மாவீரர்களைத்தவிர உலகில் வேறு எவரும் இலர்.
சாவை வென்ற சாமிகள். வனவாசம் செய்யும் சாமிகளுக்கில்லாத சக்தி மாவீரர்களிடம் உண்டு. ஆனால் சாதுவானவர்கள். சாதுக்கள்… ஆனால் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள். தமிழீழ இலட்சியத்தில் வீரமரணமடைந்த வித்துக்களை விதைத்த துயிலும் இல்லங்களை அழித்து இராணுவ முகாம்களை அமைத்துள்ளனர்.
ஆனால் உலக விதிகளுக்கு முரணான மனிதநேயமற்ற இந்தச் செயலுக்காகவும் நடந்து முடிந்த மிகப்பெரிய தமிழினப் படுகொலைகளுக்காகவும் சிங்களமே எதிர்பாராத அளவிடமுடியாத விலை கொடுக்க வேண்டி ஏற்படலாம். காலத்தின் நியதிகள் வழங்கும் தண்டனையிலிருந்து எவரும் தப்பிவிடமுடியாது. காலம் பதில் சொல்லும் என்ற குறிப்பின் கருவும் அதுவே.
மாவீரர் வாரம் என்பதை தமிழர்கள் குறிப்பிடுவதற்கு முன்பே சிறிலங்கா அரசாங்கம் மாவீரர் வார கெடுபிடிகளை ஆரம்பித்து ஆரவாரப்படுத்திக்கொண்டிருக்கிறது. இராணுவம் மிகப்பெரிய எடுப்பில் வடக்கு கிழக்கில் சோதனை, விசாரணை, ஆலயங்களில் மணிகள் ஒலிக்கக்கூடாது போன்ற ஏழு இம்சைகளை ஆரம்பித்துள்ளது.
தம் இலட்சிய செயற்பாட்டில் உயிரையே ஈயவும் ஆயத்தமாகச் செயற்பட்ட மாவீரர் மாண்பு இன்றைய உலகின் அதிமுதன்மையானது என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. நாம் பெருமை கொள்ளும் நேரம் இது. பழமைக்கும் புதுமைக்கும் பாலமிடும் எம் கவிஞர் முருகையன் இயற்றிய புதுக்குறலில் மாவீரரைப் பற்றி இரண்டு குறள்கள் உண்டு.
‘கொல்வோரை மோதி கொடுபட்ட இன்னுயிரை எல்லா உயிரும் தொழும்’ ‘ஆவி கொடுக்க அசையாத்திடம் கொண்ட மாவீரர் வாழும் மண்’
எம் மாவீரர் மாண்பு இவ்வாறுதான் உலகிற்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. “மற்றவர்கள் இன்புற்றிருக்கவேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத்துணிவது தெய்வீகத் துறவறம். அந்த தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள்” என தமிழர்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டதில் ஆழமான அர்த்தம் பொதிந்துள்ளது.
கார்த்திகை மாதம் மாவீரர் காலம். சொரியும் மழைத்துளிகளுடன் போட்டிபோட்டுக்கொண்டு எம் கண்ணீர்துளிகளும் அவர் முகம் தேடும் காலம். கவிதை பாரதி ஒரு பெண் போராளி. அவர் மாவீரர் பற்றிய கவிதையையும் எழுதிவிட்டு மாவீரரானார். அவர் எழுதிய சில வரிகளில்… ‘வானில் பறக்கும் புள்ளெல்லாம் – நான் மண்ணில் திரியும் விலங்கெல்லாம் – நான் தானில் வளரும் மரமெல்லாம் – நான் காற்றும் புனலும் கடலும் நானே’ பெண்ணாலும் சாதிக்க முடியும் என்பதை தமிழ்பெண்கள் உலகுக்கு நிரூபித்து சென்றுள்ளார்கள்.
தமிழீத்தின் அதியுயர் மானிடர் தொகுதியாக மாவீரர்கள் இடம்பிடித்துள்ளார்கள் அவர்களுக்கு இறப்பு என்பது என்றுமில்லை. ஏனெனில் அவர்கள் இறந்தபின்பும் வாழ்கிறார்கள். உலகில் மனிதர்கள் இறக்கின்றார்கள். தமிழீழத்திலோ மாவீரர்கள் வாழ்கிறார்கள். இது புத்துயிர்ப்பு மிக்க உன்னதமானதொருநெறி.
எம் மண் தம் வரலாற்றுப் பேழையினுள் அடுக்கிவைத்துள்ள ஆயிரமாயிரம் மாணிக்கங்களின் சாதனைகள் என்ன சாதாரணமானவையா? அந்தச் சாதனைகளைக்கண்டு உலகின் வல்லரசுகளே மலைத்து நின்றனவே! உள்ளே தோன்றும் மதிப்பை உணர்கிறார்கள்.
உயிரை உருவி வெளியே எடுத்து கைகளில் தாங்கி வீரச்சாவுக்கு நேரம் குறிக்கும் வீரர்களல்லவா? அந்த உயிரையே ஆயுதமாக்கி களத்திலே அதிஉயர் சாதனைபடைத்து மேற்குலக போர்த்திட்டங்களை பூவென ஊதிவிடும் மாவீரர்கள் அவர்கள். களமாடும் புலிவீரர் கண்டு இவர்கள் மாறுபட்டவர்கள், வேறுபட்டவர்கள், விசேடமானவர்கள் என உலகம் உணரத்தொடங்கிற்று. அந்த அளவுக்கு உலகப்போர் வியூகங்களில் பங்குபற்றியவர்கள். வெற்றியும் கண்டவர்கள்.
காடுகளிலும் மலைகளிலும் மரப்பொந்துகளிலும் நிலவறைகளிலும் வாழ்ந்து பழகிக் கொண்டவர்கள். நேரத்திற்கு உணவின்றி பல சந்தர்ப்பங்களில் பட்டினியாகவே இருந்துள்ளார்கள். தமிழர்கள் கண்ணியத்தோடு வாழவேண்டும் என்பதற்காக அண்ணன் எதைச் சொன்னாலும் செய்வதற்கு தயார் நிலையில் இருந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களின் சுதந்திர விடுதலைப் படையணியாகவே செயற்பட்டார்கள். தமிழர்களின் கட்டளைக்கிணங்க தரை, கடல், வான் புலிகளாக மாறி தமிழர்களைக் காப்பாற்றும் புனிதப்போரில் விதையான மாவீரர்கள் உலகத் தமிழர் மனங்களில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளார்கள். அது என்றும் அழியா வரம் பெற்றது.
வீ.ஆர். வரதராஜா
தமிழீழத் தாயகமே அவர்களின் தாகமா… இல்லையில்லை… அந்த உணர்வுக்கும் மேலான ஓர் உணர்வு… என்ன அது? தமிழர்களின் சுதந்திரம் சுய உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பதும் அதற்குள் உள்ளடக்கமாக இருக்கலாம். ஆனால்… அதற்கும் மேலே ஓர் உண்மை உணர்வு… குறிப்பாகச் சுட்டிக்காட்ட முடியவில்லை என்ற ஆதங்கம்.
45 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் ஊறிப்போன என்னால் என்னுடைய எழுத்துகளுக்குள் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களுக்குள் மறைந்துகிடக்கின்ற மாபெரும் உளக்கிடக்கையை வெளிப்படுத்த பல தடவை முயன்றிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் மனதிற்குள் ஒரு நெருடலையே ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளனிடம் ஆயிரமாயிரம் எண்ணக் கருலங்கள் ஏற்படுவதுண்டு. மெல்லிய உணர்வுகளைக்கூட அவர்களினால் துல்லியமாக அடையாளம் காணமுடியும். விண்ணும் மண்ணும் புரியும் அதிசயங்கள் கூட எழுத்தாளனிடம் மண்டியிடுகின்றன. இயற்கை அன்னையின் வியப்பான விழுமியங்களைக்கூட மிக எளிதாக அவன் இனம்கண்டுவிடுவான். ஆனால் மாவீரர்களின் அந்தத் விய்மையான இதயத்துடிப்பை கண்டுபிடிக்க முடியவில்லை. எதிரியின் குண்டுத்தாக்குதலில் காயமடைந்தவன் ஓடித்தப்ப முயற்சிக்கிறான். முடியவில்லை. அவனுடன் ஓடிக்கொண்டிருந்த நண்பனை அழைக்கிறான். ‘நண்பா! என்னால் ஓடமுடியவில்லை. ஆனால் உயிருடன் எதிரியிடம் பிடிபட நான் விரும்பவில்லை. ஆதனால் என்னை உன் துப்பாக்கியினால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிக்கொள். ஆனால் மறக்காமல் என்னிடமுள்ள ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு செல். எம் இனத்தைப் பாதுகாக்க அது உதவும் என்று கூறினான்.
நண்பன் அதிர்ச்சியடைந்தான். தன் கையால் அந்த வீரனைக்கொல்வதா, ஆயினும் அவன் மீண்டும் மீண்டும் அபாய ஒலி எழுப்பியதனால் அவன் விரும்பியபடியே செய்கிறான். ஒரு மாவீரனின் வேண்டுதலைப் பார்த்தீர்களா? அடிமனதிலிருந்து அவனிடம் எழுந்த அந்த உணர்வு… ‘எம் இனத்தைப் பாதுகாக்க அது ஆயுதம், உதவும்!’ என்று கூறினானே… அதில் பொதிந்துள்ள உள்ளார்த்தம் என்ன? சயனைட் எனப்படும் இரசாயன உயிர்க்கொல்லி புலி வீரர்களின் கழுத்தில் சிறிய குப்பிகளாக அணியப்படாத காலம் அது. புதிதாக சயனைட் குப்பியை கழுத்தில் தொங்கவிட்ட ஒரு வீரனைச் சந்தித்து அதைப்பற்றி வினவினேன். ஆனால் அந்த வீரன் ஒரு புன்னகையைத் தவிர வேறு எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.
மிகச் சில நிமிடங்களுக்குள் உடலை வருத்தி உயிரைப் பறித்துக்கொள்ளும் இந்தச் சயனைட்டின் கொடுமையை உன்னால் உணர முடியுமா? என்று மற்றொரு கேள்வியை கேட்டபொழுது புன்னகையே பதிலாக வந்தது. ஆனால் ‘நீங்கள் கேட்ட கேள்விக்குரிய பதில் உங்களுக்குள்ளும் இருக்கிறது…’ என்று கூறிவிட்டுச் சென்றான். எனக்குள் என்று அந்த வீரன் குறிப்பிட்ட விடயம் உலகிலுள்ள எல்லாத் தமிழர்களிடமும் உண்டு என்று அர்த்தம் கொள்ளலாமா? நம் புலி வீரர்கள் பத்துக்கோடி உலகத்தமிழர்களின் உயிர்மூச்சோடு என்பதை மறக்கமுடியுமா?
மாவீரர்களின் தமிழுணர்வு மிக்க தியாகத்தை குறியீட்டாக எழுத்தாளர்களினால் குறிப்பிடமுடியவில்லை. அல்லது அவர்களை முழுமையாக எழுத்தாளர்களின் படைப்புக்குள் கொண்டுவரமுடியவில்லை. இதோ வருகின்றோம் என சாவுக்கே சாவுமணி அடிக்கும் வல்லமை கொண்டவர்கள். இளமைத் துறவிகள். காவி உடை தரிக்காமலேயே துறவறம் பூண்டவர்கள்.
தமிழர்கள்… தமிழீழம் என்ற மந்திரத்தை தம் உணர்வோடு கலந்துவிட்டவர்கள். அவர்களின் அதி உயர்வான வேள்வியைக்கண்டு உலகமே அஞ்சியது. அண்டசராசரங்கள், கோடானுகோடி தேவர்கள் ஆகியோருக்கு செய்யும் யாகத்தைப் பற்றியெல்லாம் கதைகளில் படித்துள்ளோம். ஆனால் மாவீரர்களின் யாகம் தமிழர்களின் இதயங்களில் இடம்பெற்றுக்கொண்டுருக்கின்றது. இதயங்களில் வைத்து யாகம் செய்யும் பாக்கியசாலிகள் மாவீரர்களைத்தவிர உலகில் வேறு எவரும் இலர்.
சாவை வென்ற சாமிகள். வனவாசம் செய்யும் சாமிகளுக்கில்லாத சக்தி மாவீரர்களிடம் உண்டு. ஆனால் சாதுவானவர்கள். சாதுக்கள்… ஆனால் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள். தமிழீழ இலட்சியத்தில் வீரமரணமடைந்த வித்துக்களை விதைத்த துயிலும் இல்லங்களை அழித்து இராணுவ முகாம்களை அமைத்துள்ளனர்.
ஆனால் உலக விதிகளுக்கு முரணான மனிதநேயமற்ற இந்தச் செயலுக்காகவும் நடந்து முடிந்த மிகப்பெரிய தமிழினப் படுகொலைகளுக்காகவும் சிங்களமே எதிர்பாராத அளவிடமுடியாத விலை கொடுக்க வேண்டி ஏற்படலாம். காலத்தின் நியதிகள் வழங்கும் தண்டனையிலிருந்து எவரும் தப்பிவிடமுடியாது. காலம் பதில் சொல்லும் என்ற குறிப்பின் கருவும் அதுவே.
மாவீரர் வாரம் என்பதை தமிழர்கள் குறிப்பிடுவதற்கு முன்பே சிறிலங்கா அரசாங்கம் மாவீரர் வார கெடுபிடிகளை ஆரம்பித்து ஆரவாரப்படுத்திக்கொண்டிருக்கிறது. இராணுவம் மிகப்பெரிய எடுப்பில் வடக்கு கிழக்கில் சோதனை, விசாரணை, ஆலயங்களில் மணிகள் ஒலிக்கக்கூடாது போன்ற ஏழு இம்சைகளை ஆரம்பித்துள்ளது.
தம் இலட்சிய செயற்பாட்டில் உயிரையே ஈயவும் ஆயத்தமாகச் செயற்பட்ட மாவீரர் மாண்பு இன்றைய உலகின் அதிமுதன்மையானது என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. நாம் பெருமை கொள்ளும் நேரம் இது. பழமைக்கும் புதுமைக்கும் பாலமிடும் எம் கவிஞர் முருகையன் இயற்றிய புதுக்குறலில் மாவீரரைப் பற்றி இரண்டு குறள்கள் உண்டு.
‘கொல்வோரை மோதி கொடுபட்ட இன்னுயிரை எல்லா உயிரும் தொழும்’ ‘ஆவி கொடுக்க அசையாத்திடம் கொண்ட மாவீரர் வாழும் மண்’
எம் மாவீரர் மாண்பு இவ்வாறுதான் உலகிற்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. “மற்றவர்கள் இன்புற்றிருக்கவேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத்துணிவது தெய்வீகத் துறவறம். அந்த தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள்” என தமிழர்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டதில் ஆழமான அர்த்தம் பொதிந்துள்ளது.
கார்த்திகை மாதம் மாவீரர் காலம். சொரியும் மழைத்துளிகளுடன் போட்டிபோட்டுக்கொண்டு எம் கண்ணீர்துளிகளும் அவர் முகம் தேடும் காலம். கவிதை பாரதி ஒரு பெண் போராளி. அவர் மாவீரர் பற்றிய கவிதையையும் எழுதிவிட்டு மாவீரரானார். அவர் எழுதிய சில வரிகளில்… ‘வானில் பறக்கும் புள்ளெல்லாம் – நான் மண்ணில் திரியும் விலங்கெல்லாம் – நான் தானில் வளரும் மரமெல்லாம் – நான் காற்றும் புனலும் கடலும் நானே’ பெண்ணாலும் சாதிக்க முடியும் என்பதை தமிழ்பெண்கள் உலகுக்கு நிரூபித்து சென்றுள்ளார்கள்.
தமிழீத்தின் அதியுயர் மானிடர் தொகுதியாக மாவீரர்கள் இடம்பிடித்துள்ளார்கள் அவர்களுக்கு இறப்பு என்பது என்றுமில்லை. ஏனெனில் அவர்கள் இறந்தபின்பும் வாழ்கிறார்கள். உலகில் மனிதர்கள் இறக்கின்றார்கள். தமிழீழத்திலோ மாவீரர்கள் வாழ்கிறார்கள். இது புத்துயிர்ப்பு மிக்க உன்னதமானதொருநெறி.
எம் மண் தம் வரலாற்றுப் பேழையினுள் அடுக்கிவைத்துள்ள ஆயிரமாயிரம் மாணிக்கங்களின் சாதனைகள் என்ன சாதாரணமானவையா? அந்தச் சாதனைகளைக்கண்டு உலகின் வல்லரசுகளே மலைத்து நின்றனவே! உள்ளே தோன்றும் மதிப்பை உணர்கிறார்கள்.
உயிரை உருவி வெளியே எடுத்து கைகளில் தாங்கி வீரச்சாவுக்கு நேரம் குறிக்கும் வீரர்களல்லவா? அந்த உயிரையே ஆயுதமாக்கி களத்திலே அதிஉயர் சாதனைபடைத்து மேற்குலக போர்த்திட்டங்களை பூவென ஊதிவிடும் மாவீரர்கள் அவர்கள். களமாடும் புலிவீரர் கண்டு இவர்கள் மாறுபட்டவர்கள், வேறுபட்டவர்கள், விசேடமானவர்கள் என உலகம் உணரத்தொடங்கிற்று. அந்த அளவுக்கு உலகப்போர் வியூகங்களில் பங்குபற்றியவர்கள். வெற்றியும் கண்டவர்கள்.
காடுகளிலும் மலைகளிலும் மரப்பொந்துகளிலும் நிலவறைகளிலும் வாழ்ந்து பழகிக் கொண்டவர்கள். நேரத்திற்கு உணவின்றி பல சந்தர்ப்பங்களில் பட்டினியாகவே இருந்துள்ளார்கள். தமிழர்கள் கண்ணியத்தோடு வாழவேண்டும் என்பதற்காக அண்ணன் எதைச் சொன்னாலும் செய்வதற்கு தயார் நிலையில் இருந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களின் சுதந்திர விடுதலைப் படையணியாகவே செயற்பட்டார்கள். தமிழர்களின் கட்டளைக்கிணங்க தரை, கடல், வான் புலிகளாக மாறி தமிழர்களைக் காப்பாற்றும் புனிதப்போரில் விதையான மாவீரர்கள் உலகத் தமிழர் மனங்களில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளார்கள். அது என்றும் அழியா வரம் பெற்றது.
வீ.ஆர். வரதராஜா