இருக்கின்றான் தலைவன் இருக்கின்றான்
இழி நிலை அகற்றி உயர் நிலை தந்திட்ட
எம் தலைவன் பிரபாகரன் இருக்கின்றான்
வானமே தலையில் வீழட்டும்
வாசலில் கோலம் அழியட்டும்
புத்தனின் சிலைகளும் முளைக்கட்டும்
எத்தரும் எழுந்து வெல்லட்டும்
வெற்றிகளெல்லாம் நிச்சயம் அல்ல
தோல்வி என்பதும் முடிவுரை அல்ல
அநீதியை அழித்திடும் அறநெறி நெருப்பே
இருண்ட வாழ்வுக்கு ஒளி கொண்டு வா
பிறந்தாய் எமக்கென நீ ஒரு முறைதான்
இறந்தாய் என்றார் பல முறைதான்
ஐந்தின் அருகே ஐந்தும் அழைக்கிறது
இறவா தலைவனே இடியாய் வா
வார்ப்புகள் தானே வாழ்வின் வசந்தம்
எழுச்சிகள்தானே ஏற்றத்தின் உயர்ச்சி
சொன்னவன் நீ தானே
கொற்றவரென்றே குற்றங்கள் இளைக்கும்
கொடியவர் வாழ்வை முடிவாக்கு
உற்றவர் வாழ்வையும் உறவையும் சுறண்டும்
ஊனக் கொடியோரின் உளம் மாற்று
எதிர் காலம் என்றும் எமதாகட்டும்
புவி வாழ்வின் புயல்களும் நிலை சாயட்டும்
அன்பெனும் அக ஊற்றின் அலை தழுவ
சூரியத் தேவனே
உன் விழிக் கனல் ஊற்றாகட்டும்
புரட்ச்சி நிலவே எழுச்சித் தீயே
தமிழின விடிவின் தேசியத் தலைவனே
எழுச்சி எழுச்சி என்றுமே எழுச்சி
உன் ஆற்றலின் ஒளியே தமிழீழ மலர்ச்சி.
கவிஞர்:வல்வை சுஜேன்