Sunday, May 26, 2013

வரும்படை நாடே அதிர….!



நஞ்சுமாலை கழுத்திலாட 
நற்பண்பு மனதிலாட 
வெஞ்சினம் கொண்டு பாயும்
வேங்கைகள் எங்கள் வீரர் 
அஞ்சிடா மனவுறுதி
அனைத்திலும் ஈழத்தாகம் - எவரும்
மிஞ்சிடா தீரரிவரின் 
மிடுக்கினை உலகம் பேசும் 

துஞ்சிய குரோதத்தோடு – மாவீரர்
துகிலினை உரிந்த கீழோர்
பிஞ்சான பெண்னைத் - தேடி 
பிளிர்ந்திட்ட நாசகாரர் 

கொஞ்சமா செய்த கோரம் 
கொதிக்குதே எங்களுள்ளம்
பஞ்சமா பாதகட்கு 
பாடைகள் தயார்நிலையில்! 

நெஞ்சிலே நெருப்பேந்தி 
நீண்டதோர் சேனைகொண்டு 
வஞ்சகர் உம்மைத்தேடி 
வரும்படை நாடேயதிர! 

சஞ்சலம் என்றுணர்ந்து 
சரணடை படலம் தொடர
கெஞ்சியே உயிரைக்காக்க 
கொடுபடை காலில் வீழும் - அன்று 

பஞ்சினை போன்ற எங்கள்
பண்பினை உலகம் போற்றும் - எதிலும்
பஞ்சமே இல்லா ஈழம்
பாரிலே விளைந்து நிற்கும்!

கவிஞர்:தலைத்தீவான்