Monday, May 20, 2013

பிரிகேடியர் பால்ராஜ்


பிரிகேடியர் பால்ரரஜ்
பிறப்போடு வந்த வீரம் உனக்கு!
பிறவியிலே கர்னனுக்கு
கவசகுண்டலம் போல!

மணலாற்று மண்ணில்
மன்னவனைக் காக்க
மற்றும் இருவருடன்
மா வீரனே நீ செயற்பட்டாய்!

சிங்களப் படைகளை
துடைத்தொழிக்க
தளபதியானாய் வன்னியிலே!

கொக்குவில் மாங்குளம்
கிளிநொச்சியில்
தகர்த்தழித்தாய்
சிங்களப்படைத்தளங்களை!

வழிநடத்தினாய்
தலைமைத்தாங்கி
"கடற்காற்று’’ க் கெதிராய்படையை
முல்லை மண்ணில்!

முதல் சிறப்பு
தளபதியானாய்
சார்ள்ஸ் என்ரனியின்
சிறப்பு படையணியில்!

வன்னி விக்ரம்’’ வை
முறியடித்த நீ
பேரிடி கொடுத்தாய்
உலங்கு வாணுர்தியை
சுட்டு வீழ்த்தி!

சுற்றுலா விடுதிபடைமுகாமை
தகர்த்தெரிந்தாய்
தலைமைத்தாங்கி
ஆகாய கடல் வெளிச்சமரில்!

மணலாற்று மண்ணில்
தலைமைத்தாங்கினாய்
மின்னல் நடவடிக்கையைமுறியடிக்க!

எங்கும் எதிலும்
துணை நின்று நீ
துணை தளபதியானாய்!

காலையும் முறித்துக்கொண்டு
களத்திலே மோதி
முதல் தடவையாக
அழித்தொழித்தாய்
அன்னியன் டாங்கிகளை!

யாழில் முன்னேறி பாய்ந்த
மோட்டு சிங்களப் படைகளை
முறியடிப்பு தாக்குதலாய்
புலிப்பாச்சல் கொண்டு
புகுந்து விளையாடினாய்!

சூரிய கதிரெனப் புறப்பட்ட
சிங்களப்படைகளை
எதிர் கொண்டாய் யாழில்!

ஓயாத அலைகள் 01ல்
ஒருங்கிணைப்பு தளபதியானாய்!

தொடங்கியதும்
வன்னியில் ‘’ஜெயசிக்குரு’’
தொடக்கத்திலேயே
எதிர்த்து நின்றாய்!

ஓயாத அலைகள் 02க்கு
உறுதுணையாக நின்று
ஊடறுப்பு தாக்குதலில்
ஓடஓட விரட்டி எதிரியை
வெற்றி பெற்றாய்!

பெரும் அணிக்கு தலைமைதாங்கி
கடல்வழிசென்று தரையிறங்கி
இத்தாவில்’’ ஊடறுத்து
எதிரியின் கோட்டையின்
முற்றுகைக்குள் நின்றாய்
முப்பத்துநான்கு நாட்கள்!

எதிர்த்து விளையாடி
இழப்புக்களை
ஏற்படுத்தினாய் எதிரிக்கு!

ஓயாத அலைகள் 3க்கு
ஓத்தாசையாக இருந்து
ஆனையிறவை அடிமைப்படுத்தியது
உனது வீரம்!
நான்கு தளபதிகளை சிங்களம்
மாறி மாறி நியமித்தபோதும்
அசைக்கமுடியவில்லை வ_ரனே
உன்னை இத்தாவிலில்!

முதன்மை பங்கை வகித்தாய்
முகமாலையில்
த_ சுவாலை தாக்குதலில்!

ஆழிப்பேரலைக்கூட
அழிக்கமுடியவில்லையே உன்னை
அதுகூட பயந்ததாமே
உன் வீரம் கண்டு!

போர் பயிற்சிகளையும்
போர் உத்திகளையும்
புரியும்படி சொல்லிக்கொடுத்தாயே
போரரளிகளுக்கு வன்னியில்!

மதயானையைக் கண்ட
மனிதர்களைப்போல்
சிதறி ஓடியதே சிங்களப்படை!

வரத்தையும் விவேகத்தையும் சேர்த்து
விளையாடியவன் நீ!

உன்னையே பிழிந்து
உன் உடன்பிறப்பிற்கு
கொடுத்து விட்டு
சக்கையாகப் போனாயே!
உன்னைவிட உயர்ந்தவன்
உலகில் உன்டோ?
மன்னவனே!
உன் சக்கையும்
உயர்தர விதையாகி
உன் மண்ணில் விருட்சமாகும்!

கவிஞர்:வே. குமாரவேல்