
தேகம் துடித்திட வேண்டும் உந்தன்மன
திண்மை கொதித்தெழ வேண்டும் சுதந்திர
தாகம் வருத்திட வேண்டும் ஈழமது
தாங்கும் துயர் எண்ண வேண்டும் நிலமதின்
பாகம் பிரித்தொரு எல்லை வகுத்திடும்
பாங்கு மனம் கொள்ளவேண்டும் எதற்கென
வேகம் விடுத்துமே தோழா காலமதை
வீணாய் கழிப்பதோ சொல்லு!
மேனி பதைத்திடவேண்டும் மனதினில்
மின்னல் வெடித்திடவேண்டும் உந்தன்மன
வானின் இடியெழும் சேதி வந்துஉந்தன்
காதில் ஒலித்திடவேண்டும் சுதந்திர
ஆணை யுடன் திருநாட்டை ஆளுமொரு
ஆசை பிறந்திடவேண்டும் இதைவிட்டு
ஏனோ தயங்கினை தோழா பகைவனை
ஏனென்று கேட்டிட வாடா
கெட்டியாகக் கைகள் பின்னே பிணைத்துமே
கீழ்மன தோடவர் சட்டை கழற்றியே
கட்டியவர் கண்கள் மூடிக் கொடியவர்
காலாலு தைத்தவர் மெய்யை இழிசொல்லு
கொட்டிச் சிரித்தவர் சுட்டு உயிரது
கூட்டைவிட்டுவெளியேறத் துடித்திட
விட்டு வெறுமனே வீட்டில் இருந்துநாம்
வேடிக்கை காண்பதோ தோழா
ஓடி நரம்பினில் சூடு எழுந்துன
துள்ளமதில் வீறு கொண்டு சுதந்திரம்
தேடி நீதிதனைக் கேட்க மறந்துமே
தின்று படுப்பதோ தோழா பலருடன்
கூடிக் கதைகளைப் பேசி உறவுடன்
கொஞ்சிப்பேசி விளையாடிப் படுத்துமே
ஆடித்திரிந் தனையாகில் வருவது
ஆக அவலமென் றாகும்
உற்ற வரையறை யெல்லாம் விட்டேஅவர்
உண்மைதனைப் போர்வையிட்டு நேர்மையதை
விற்று விலைதனைக் கொண்டு தமிழனை
வெட்டி அழித்திட விட்டு செய்யுமந்த
குற்றந்தனை கேட்க நீயும் தெருவினில்
கூடிஎழவில்லை என்னில் உனதரும்
சுற்றம் உறவுகளோடு சேர்ந்துநீயும்
சொல்லாத் துயருற நேரும்
கவிஞர்:கிரிஷாசன்
திண்மை கொதித்தெழ வேண்டும் சுதந்திர
தாகம் வருத்திட வேண்டும் ஈழமது
தாங்கும் துயர் எண்ண வேண்டும் நிலமதின்
பாகம் பிரித்தொரு எல்லை வகுத்திடும்
பாங்கு மனம் கொள்ளவேண்டும் எதற்கென
வேகம் விடுத்துமே தோழா காலமதை
வீணாய் கழிப்பதோ சொல்லு!
மேனி பதைத்திடவேண்டும் மனதினில்
மின்னல் வெடித்திடவேண்டும் உந்தன்மன
வானின் இடியெழும் சேதி வந்துஉந்தன்
காதில் ஒலித்திடவேண்டும் சுதந்திர
ஆணை யுடன் திருநாட்டை ஆளுமொரு
ஆசை பிறந்திடவேண்டும் இதைவிட்டு
ஏனோ தயங்கினை தோழா பகைவனை
ஏனென்று கேட்டிட வாடா
கெட்டியாகக் கைகள் பின்னே பிணைத்துமே
கீழ்மன தோடவர் சட்டை கழற்றியே
கட்டியவர் கண்கள் மூடிக் கொடியவர்
காலாலு தைத்தவர் மெய்யை இழிசொல்லு
கொட்டிச் சிரித்தவர் சுட்டு உயிரது
கூட்டைவிட்டுவெளியேறத் துடித்திட
விட்டு வெறுமனே வீட்டில் இருந்துநாம்
வேடிக்கை காண்பதோ தோழா
ஓடி நரம்பினில் சூடு எழுந்துன
துள்ளமதில் வீறு கொண்டு சுதந்திரம்
தேடி நீதிதனைக் கேட்க மறந்துமே
தின்று படுப்பதோ தோழா பலருடன்
கூடிக் கதைகளைப் பேசி உறவுடன்
கொஞ்சிப்பேசி விளையாடிப் படுத்துமே
ஆடித்திரிந் தனையாகில் வருவது
ஆக அவலமென் றாகும்
உற்ற வரையறை யெல்லாம் விட்டேஅவர்
உண்மைதனைப் போர்வையிட்டு நேர்மையதை
விற்று விலைதனைக் கொண்டு தமிழனை
வெட்டி அழித்திட விட்டு செய்யுமந்த
குற்றந்தனை கேட்க நீயும் தெருவினில்
கூடிஎழவில்லை என்னில் உனதரும்
சுற்றம் உறவுகளோடு சேர்ந்துநீயும்
சொல்லாத் துயருற நேரும்
கவிஞர்:கிரிஷாசன்