தமிழீழத்தாய் நாட்டிற்காக தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீர நாளில் எடுத்துக்கொள்ளும் உறுதி மொழி தான் இது. புலம்பெயர் ஈழத்தமிழர்களே இந்த உறுதி மொழியை உறுதியாகக் கொண்டு தமிழீழ விடுதலைக்காக உழையுங்கள். தினமும் இந்த உறுதி மொழியை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
உறுதி மொழி; ஈழத்தமிழனாகிய நான் உலகின் எத்திசையில் வாழ்ந்தாலும் தமிழீழம் எனது இலட்சியம். இந்த இலட்சியத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதுடன் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசான எனது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக அயராது உழைப்பேன் என இந்நாளில் உறுதி மொழி எடுத்துக்கொள்கின்றேன்.