வில்லெடுத்து நாண்வளைக்கும் வேடுவிச்சி போலிங்கு
சொல் தொடுத்து நாண் இழுத்து
நற்றமிழை போற்றியிங்கு நாவிசைக்க பாட வந்தேன்
நம் தமிழின் பெருமையினை நற்கவியால் சாற்ற வந்தேன்
தனிப்பெரும் தலைவனின் தலைமையினில்
தமிழ் தானையும் தாண்டிடும் தக்களத்தை
விருதுகள் படைப்புலி போர்க்களத்தில்
வீரகாவியம் படைத்தனர் விண்ணகத்தில்
அதிர்ந்திடும் பீரங்கிச் சரவமுதம்
அதில் அழிந்திடும் அரக்கர்தம் அணிக்கவசம்
பாய்ந்திடும் கரும்புலி உயிரொளியில் எதிரி
பாதாதிகேசமும் மணல் துகளாய்
பொங்கிடும் ஆழியின் பேரமைதி அதை
போற்றிடும் அலைகளில் சரி நியதி
மங்காது ஓங்கிடும் மறநீதி அண்ணன்
மனதினை நிறைப்பது தமிழ்சாதி
சங்கங்கள் போற்றிய சான்றோர் தமிழ்
அண்ணன் சரித்திரத்திற்கோர் சாட்சித் தமிழ்
உலக அரங்கினில் உயர்ந்தோர் தமிழ் எம்மவர்
உணர்விற்கு வழி சமைத்தோன் தமிழ்
வரலாறு கண்டிடா சமர்க்களத்தை தமிழ்
வாழ்நாளில் கண்டிடா வில்யுத்தத்தை
இனவெறி அழித்தவர் இருண்ட உள்ளத்தை
இருகூறாய் பிளந்தனர் எம் புலிகள்
அகிலமெல்லாம் பொங்கு
அவர்தானே உயிர் கொடுத்தார்
கொற்றத்து முரசொலி ஓங்கிடட்டும்
எம் கொங்கணவன் தமிழ் முழங்கிடட்டும்
நற்றத்து நான்மறை நல்லியம்ப நம்மன்னனின்
நற்கனவு நடந்திடட்டும்
கவிஞர்:கவிதை
Tuesday, May 28, 2013
அகிலமெல்லாம் போற்றும் தமிழுக்கு அவர்தானே உயிர் கொடுத்தார்
Tuesday, May 28, 2013
கவிதைகள்